Oct 22, 2008

உளறல்-7




என்ன எழுதுவது என்று தெரியவில்லை, ஒரு வாரமாக எதுவும் எழுதாதது ஒரு சோர்வாக இருக்கிறது, காலை 5 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் புறப்படும் போது 6:30 ஆகிவிடுகிறது, மதிய சாப்பாடு ஒன்று இரவிலேயே செய்து வைப்பதை காலையில் எடுத்துக்கொண்டு அலுவலகம் வந்தேன், மதியம் சூடு செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம், காலை உணவு பெரும்பாலும் சாண்ட்விச் ஆகவே அமைந்துவிட்டது, பட்டரும் ஜாமுமாய், இது கொண்டுபோய் புதிய வியாதியில் விடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலை,

வலையில் இன்றுகாலை பஞ்சாங்கம் தேடினேன் ஒரு நண்பருக்காக எல்லா பஞ்சாங்கங்களிலும் மாத விபரங்கள் மட்டுமே காணப்படுகின்றன, திசாபுத்திகள் போன்ற விபரங்கள், காணப்படவில்லை, பின்னர் இந்தியாவுக்கு அழைத்து பின் போனிலேயே புத்தி விபரங்களைப்பெற்றேன், அப்படி யாருக்காவது இந்த வலை தெரிந்திருந்தால் எழுதுங்கள், சாதாரணமாக ஜோதிடர்கள் திசை கணக்குகளை மனப்பாடமாக வைத்திருப்பார்கள், நான் தொழில்முறை ஜோதிடனாக இல்லாததால் ஒவ்வொருமுறையும் பார்த்துதான் செய்ய வேண்டியுள்ளது,

ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தை பார்ப்பது வழக்கம், அதற்கு பல காரணங்கள் உண்டு, ஜோசியம் பார்த்துதான் எல்லாம் செய்கிறேனா? என்று கேட்காதீர்கள், என்னைப்பொருத்தவரை ஜோசியம் எனபது ஒரு அறிவிப்பு போல சில முடிவுகளை நம் உள்மனது எடுக்க அது சில வார்த்தைகளை சொல்லும் அவ்வாறு சொல்லும் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் ஒரு சில மனிதர்களிடம் வெளிப்படுத்தும்போது நமக்கான தீர்வும் அதில் வெளிவரும் இது எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் அதைநான் தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறேன்,

ஜோதிடம் பற்றி ஒரு விவரமான பதிவு எழுதவேண்டும் என்று ஆசை அதனை பின்னர் ஒரு சமயத்தில் செய்யலாம் என்று நினைக்கிறேன், இன்று உலகம் ஒரு மோசமான நிலையில் பொருளாதார ரீதியாக போய்கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, அமெரிக்காவில் நிறைய மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன அவர்கள் இப்போது சிறு குடிசைகளை அமைத்துக்கொண்டு வாழ்வதாகவும் செய்திகள் கூறுகின்றன, கீழே உள்ள இந்த தொடர்பில் கூடுதல் விபரங்கள் உள்ளன.
அதற்கான காரணம், வங்கிகளுக்கு வரவேண்டிய தவணைகள் கட்டப்படாததுதான், கூடவே வங்கிகளின் சொத்து மதிப்பும் மிக மோசமாக அதனால் அவைகள் திவலாகி அரசு அவற்றை காப்பாற்ற முயல்வதும் நடந்து வருகிறது, இதனால் நமது நாட்டு பங்கு சந்தையும் பாதாளம் வரை சென்று மீண்டு வந்திருக்கிறது,

இவையெல்லாம் உலகை எங்கு கொண்டுபோய்சேர்க்குமோ தெரியவில்லை, மகாத்மா சொன்னதுபோல் வாழ்வில் எளிமை இல்லாதுபோனால் இப்படிதான் ஆகும்போல் தெரிகிறது, நமது இந்தியாவில் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச எளிமைதான் மக்களை இன்னும் தத்தமது சுய அடையாளத்தில் வைத்திருக்கிறது, தனக்கான தேவைகளை அரசிடம் எதிர்பார்க்காமல் மனிதன் வாழும்போது அரசின் வீழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களை பாதிக்காது, இன்று டாலர் உயரப்பறக்கிறது, ஆனால் அது எத்தனைகாலத்திற்கு என்று தெரியவில்லை, ரஷ்யாவும், ஈரானும், கத்தாரும் இயற்கை வாயு சம்பந்தமாக ஒரு அமைப்பை ஏற்படுத்த போகிறார்கள், அவர்கள் மூவரும்தான் இன்று உலகின் 60 சதவீத இயற்க்கைவாயு உற்பத்தியாளர்கள் என்பது கவனிக்கவேண்டிய விஷயம், எண்ணை எரிவாயு வர்த்தகம் டாலரில் இருந்து வேறு பணத்துக்கு மாறினால் டாலரின் பாடுதிண்டாட்டமாகலாம், என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை,

இந்திய வங்கிகள் எந்தபாதிப்பும் அடையாது என்று பிரதமர் சொல்கிறார் இன்றய நிலையில் அவர் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும், இந்த விஷயத்தில் அவரைவிட நம்பகமான, விஷயம் தெரிந்த ஆள்வேறு இல்லை,

இன்று இந்திய வரலாற்றில் மிகமுக்கியமான நாள், சந்திராயன் - 1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விட்டது, அது தனது நிலையை அடைந்த பின் அதன் செயல்பாடுகள் தொடங்கும் 380 கோடி ரூபாய் செலவில் அனுப்பட்டுள்ளது, அனேகமாக மிக குறைந்த செலவில் இவ்வளவும் செய்யப்பட்டது நம்நாட்டில்தான் என்று நினைக்கிறேன், இதற்காக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு தருணம் இது,

இரண்டு வருடங்கள் இந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரும் பல தகவல்களை நமக்கு அனுப்பும், அது அடுத்த நிலைக்கான உதவியாக இருக்கும், இதைப்பற்றிய மேலதிக தகவலுக்கு கீழ் உள்ள இணைப்பில் நண்பர் பத்ரி அருமையாக விளக்கியுள்ளார்

http://thoughtsintamil.blogspot.com/2008/10/blog-post_21.html

இன்று இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் கவலை தருவதாக உள்ளது, இதற்கெல்லாம யார் காரணம், என்பது போன்ற விவாதங்கள் நடைபெறுகிறது ஒரு பக்கம், ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளும் பெண்களும், அப்பாவிகளும் இன்று எந்த நியாயமான காரணமும் இன்றி கொல்லப்படுகிறார்கள், அது மிகப்பெரிய கொடுமை, மகாத்மா, காமராஜர், பெரியார் போன்ற தன்னலம் கருதாத தலைவர்கள் இல்லாதது ஒரு பெரிய குறையாக தோன்றுகிறது, உயிரின் மதிப்பு தெரிந்த மனிதர்கள் குறைந்து கொண்டே வருவதன் பாதிப்பு இது, உயிர் எத்தனை மகத்தானது அதன் துன்பங்களை ஏன் மனிதன் இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறான், மனிதனை மனிதனே கொல்லும் இந்த கொடுரம் தவிர்க்க எத்தனை காந்தி வந்தாலும் தீராது போலிருக்கிறது, உனது கொள்கைகள் எதுவாவது இருக்கட்டும், ஒரு உயிர் போகிறது எந்த இயற்கை காரணமும் இல்லாமல் என்றால் அதற்கு துடிக்கவேண்டாமா உள்ளம்,செயல்பட வேண்டாமா? இதிலும் எத்தனை ஓட்டு கிடைக்கும் என்று சிந்திப்பது எத்தனை கேவலம், நல்ல தலைவர்கள் இல்லாமல் போனதின் கொடுமை இது, காந்தி படத்தில் ஒரு காட்சி வரும்,

காந்தி முதன் முதலாக காங்கிரஸ் மாகாநாட்டில் பேசுவார், அதில் எல்லோரும் சுயாஆட்சி வேண்டும் என்று கேட்பார்கள் ஆனால் காந்தி பேசுவது அப்படியே வேறு தொணியில் இருக்கும், நாம் இங்கே சுயாட்சி கேட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனால் ஒரு சராசி இந்தியன் இன்றைய ஒருவேளை உணவுக்கே போராடிக்கொண்டிருக்கிறான், இந்தியா 700,000 கிராமங்களைக்கொண்ட ஒரு தேசம் அதன் ஒவ்வொரு மனிதனோடு களத்தில் இறங்கி நின்றால்தான் நாம் இந்தியாவின் சார்பாக போராடுவதாக அர்த்தம், அதைவிட்டு ஏதோ பாம்பேயிலும் டெல்லியிலும் உள்ள சில வக்கீல்கள்தான் இந்தியா என்றால் சுயாட்சி கொடுப்பதற்கு ஆங்கிலேயனுக்கு எந்த தேவையும் அவசியமும் இல்லை என்பார், அந்த நினைப்புதான் அவரை ஒரு சராசரி இந்தியனாக வாழவைத்ததது அந்த வாழ்க்கை முறைதான் ஒவ்வொரு இந்தியனையும் இவர் நமக்காக வந்தவர் வாழ்பவர் என்று அவர் பின்னால் செல்ல வைத்தது,

இது இன்று உள்ள தலைவர்களுக்கு தெரியாதா? பின் ஏன் அவர்கள் ஏதோ ஒரு அதிசய உலகத்தில் இருந்து வந்தவர்கள் போல் மக்களிடம் இருந்து விலகி கொள்கிறார்கள், தான் உயரத்தில் இருந்துதான் பார்ப்பேன் என்று மாறிக்கொள்கிறார்கள், இதனை நமது மக்களின் கெட்ட நேரம் என்றுதான் சொல்லவேண்டும், ஒரு நல்ல தலைவருக்காக ஏங்கி கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை இப்போது.

எனது வாழ்வில் மிக முக்கியமான ஒரு படம் “ காந்தி ” அது, எல்லோருமே பலமுறை தனிமையில் அந்த படத்தை பார்க்கவேணும், அப்போதுதான், நமது சுதந்திரத்தின் பெருமையும் உயிர்களின் மதிப்பும் நம்மனதில் பதியும், உங்கள் குழந்தைகளுக்கும் இதை பார்க்க செய்யுங்கள் எதிர்கால சமுதாயம் வன்முறைக்குள் போகாமல் இருக்க இது உதவலாம்.

உலகம் பிழைக்கத்தெரியாதவர்களால்தான் இன்னமும் உயிரோடு இருப்பதாக ஒரு அறிஞன் கூறினான், ஆமாம் எல்லோரும் பிழைக்க தெரிந்தவர்களாக மாறிப்போனால் வெறும் பொறாமையும் வெறுப்பும் வேதனையும்தான் மிஞ்சி இருக்கும்,

முடிந்தவரை எல்லோரயும் நேசியுங்கள்,


செல்வம்.

2 comments:

  1. தோழர் தவநெறிச்செல்வன் அவர்களே..
    வாடிய பயிரை பார்த்த போதெல்லாம் வாட வேண்டும் என்ற வள்ளலார் சொல்லை செயல் படுத்த முயலுதல்களுக்கு, அடியேன் சார்பாக வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. நன்றி திரு.கலையரசன் அவர்களே, தங்களைப்போன்றவர்கள் எனது தளத்திற்கு வருவது பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்