Apr 23, 2009

அவரவர் அவர் வேலையை பார்க்கிறார்கள் இலங்கையாம் இலங்கை.

என்னையா உலகம் இது, மனது பதறுகிறது, அப்பாவி மக்கள் தலையில்லாத குழந்தைகளின் சடலங்கள், சோற்றுக்காக மக்கள் போராடும் அவலம், பதறிக்கொண்டு வருகிறது, முன்பெல்லாம் ஆப்பிரிக்க தேசத்தில் நடந்து கொண்டிருந்தது போல் இன்று நமது பக்கத்து தேசத்தில் உலகின் ஒரு அற்புதமான ஒரு மனித இனம் அழிகிறது அல்லது அழிக்கப்படுகிறது,

 

இதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே இல்லை, கருணாநிதி உள்ளிட்ட அரசியல் வாதிகள் வழக்கம் போல எந்த இழப்பும் இல்லாமல் என்ன என்ன நாடகம் நடத்தி ஓட்டு வாங்கலாம் என்று யோசிக்கிறார்கள், அதை நிறைவேற்றவும் செய்கிறார்கள்

 

தமிழகத்தின் எல்லா பத்திரிக்கைகளும் இதையெல்லாம் பயன்படுத்தி தத்தமது சர்குலேஷனை உயர்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள், காங்கிரஸ் இந்த பிரச்சினை தனது அடுத்த ஆட்சி அமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக்கூடாதே என்று பதறுகிறது அல்லது அப்படி நடிக்க முயல்கிறது,

 

தமிழக தொலைக்காட்சி சானல்கள் வழக்கம் போல் தனது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களையும் சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளையும் வழமைபோல் தந்து கொண்டிருக்கிறது,

 

எல்லா பிரச்சினையிலும் கருத்து கூறும் அல்லது கவலை அல்லது அக்கறை தெரிவிக்கும் சினிமாதுறை வழக்கம் போல நடைபெறுகிறது அதன் பெரிய நடிகர்கள் தத்தமது தினசரி கடமைகளை செய்வனே நிறைவேற்றி தனது அடுத்த படங்களைப்பற்றிய கவலையில் இருக்கிறார்கள்,

 

IPL ன் இன்றைய போட்டிகளை கண்டு அதன் வெற்றிகளை விவாதித்து ஒரு இளைஞர் கூட்டம் சாவகாசமாய் பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறது,

 

இன்னும் எத்தனையோ உபயோகம் இல்லாத செயல்களின் தமிழன் வழக்கம் போலவே வீண் செய்து கொண்டிருக்கிறான், இதெல்லாம் இலங்கை அரசுக்கு தெரியாமல் இல்லை, இது வெறும் வாய்ப்பேச்சு கூட்டம் அதனால்தான் அவர்கள் தங்களின் எந்த செயல்பாட்டையும் மாற்றாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள்,

 

தலைவர்களே இப்படி சுயநலமாகவும் செயல்பட முடியாத சிங்கங்களாகவும் ஆகிவிட்ட நிலையில் நாம் என்னதான் செய்யப்போகிறோம் என்று தெரியாமல் செய்திகளைப்படித்து பதறுகிற ஒரு சராசரி நிலையில் சாதாரணமக்களாகிய நாம் இருக்க வேண்டிய நிலை மிகவும் மனது வலிக்கிறது, ஒரு சுய நலமில்லாத ஒரு தலைவன் தமிழினத்தில் தோன்றவே மாட்டானா?

 

அப்படி ஒருதலைவன் வந்து மிகப்பெரிய வன்முறையில்லாத ஒரு போராட்டத்தின் மூலம் இன்னொரு மகாத்மாவாய் இந்த மனித குல சீரழிவையெல்லாம் தடுத்து நிறுத்த மாட்டானா என்று உள்ளம் ஏங்குகிறது.

Apr 19, 2009

2004 ல் மதுரை தொகுதி நிலவரம்

படத்தில் கிளிக்கினால் பெரிதாக பார்க்கலாம்

சுமார் 1,37,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தான் போன முறை மோகன் வெற்றி பெற்றுள்ளார், ஆனால் அப்போதைய கூட்டணி பலம் பார்க்கும் போது இந்த வெற்றியின் அளவு புரியும்,

 

திமுக அதிமுக போக சிபிஎம் ன் ஓட்டுக்கள் அதிகம் உள்ள தொகுதி, கூடவே காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவு ஓட்டுக்கள் உள்ள தொகுதி.

 

இதில் இப்போது திமுக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் அதிமுகவுடன் உள்ளன, அந்த 1,37,000 ஓட்டுக்கள் இந்த கூட்டணி மாற்றத்தால் அதிமுகவுக்கு சாதகமாக விழ நேர்ந்தால் அது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும், அதே நேரம் மு.க அழகிரி தனது தேர்தல் அனுபவத்தால் அந்த ஓட்டுக்களை தனக்கு சாதகமான நிலையில் திருப்பகூடியவராக இருப்பதால் இந்த தேர்தல் புதிய பதிலைத்தரலாம், அதே நேரத்தில் தேமுதிகவின் ஓட்டுக்கள் கணிசமான எண்ணிக்கையில் கடந்த இரண்டு இடைத்தேர்தலிலும் நிருபிக்கப்பட்டுள்ளன, அதன் பாதிப்பும் இந்த முறை பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்,

 

மொத்தத்தில் இந்த மதுரையை மீட்கப்போவது கடைசி நேர தேர்தல் ராஜதந்திரம்தான்

பல மாதிரியான விளைவுகளை நோக்கி இந்த தேர்தல்

இந்த தேர்தல் எத்தனை விதமான முடிவுகளைத்தரப்போகிறது என்று தெரியவில்லை அதனோடு ஒரு சரியான முடிவுக்கு வர முடியாமல் கிட்டதட்ட எல்லா கணிப்பாளர்களும் திணறுவது அவரவர் முடிவுகளை காணும்போது தெரிகிறது, இருந்தாலும் கேரளத்தின் சூழ்நிலையை அங்கே உள்ள நண்பர்கள் மூலம் காணும்போது அது காங்கிரஸூக்கு சாதகமான சூழல் இருப்பதாக கூறுகிறார்கள்.

 

என்ன இருந்தாலும் தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் எனக்கூட்டணி காட்சிகள் மாறப்போவதால் எந்த கட்சியும் தற்போது மிக கடுமையான விமர்சனங்களை வைக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது, அதிமுக கூட தேர்தலுக்கு பின் காங்கிரஸூடன் கூட்டணி வாய்ப்புகளை நிராகரிக்காது என்றே நம்புகிறேன், அப்படி தேர்தலுக்கு பின் நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை தமிழகத்தில் விலக்கவேண்டி வரலாம்,

 

இப்படி பல மாதிரியான விளைவுகளை நோக்கி இந்த தேர்தல் செல்கிறது, ஆந்திரத்தில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் மிகப்பெரிய தோல்வியை தழுவக்கூடும் என்று கூறுகிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஒருவேளை அப்படி நடந்தால் அது புதிய கட்சி தொடங்க ஆசைப்படும் மற்ற நடிகர்களுக்கு பாடமாக அமையலாம்,

 

தேமுதிகவின் இந்த தேர்தல் ஒரு முன்னேற்ற பாதையாக இருக்கும் என்று நம்புகிறேன்,

அவர்கள் வெற்றி பெறுவதை விட சதவீதத்தை கூட்டும் முயற்சியில்தான் இருக்கிறார்கள், காங்கிரஸூடனான கூட்டணி ஏற்படாதது நல்லது என்றுதான் நான் நினைக்கிறேன்,

 

சரத்குமார், கார்த்திக் போன்றவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய கேள்விகுறிகளை இந்த தேர்தல் உண்டாக்கும்.

 

திமுகவின் உள்கட்சி விவகாரங்கள் இந்த தேர்தலுக்கு பின் புதிய பரிமாணம் பெறலாம் அதன் தோல்வி விகிதம் மற்றும் அழகிரியின் மதுரை வெற்றி வாய்ப்புகள் போன்றவைகள் இதற்கான காரமாக அமையும், மதுரை அந்த வகையில் மிக முக்கிய பங்காற்றப்போகிறது.

 

குஜராத்திலும் இந்த தேர்தல் ஒரு புதிய திசையில் செல்கிறது, அதன் நவீன் பட்நாயக் தனது கூட்டணியை மாற்றி விட்டதில் ஒரு அக்னி பரிட்சையை எதிர்கொள்கிறார், அவர் மீண்டும் பெறும் வெற்றியின் அளவு பல கணக்குகளை மாற்றப்போகிறது,

 

இதில் முக்கியமான விஷயம் மாயாவதியின் வெற்றிதான், எனக்கென்னவோ இந்த முறை மாயாவதி மிக அதிகப்படியான தொகுதிகளை பிடிப்பார் என்றே படுகிறது அதனால் ஏற்படும் மாற்றம் நிச்சயம் ஒரு பெரிய குழப்பத்தை மத்திய ஆட்சி அமைப்பில் உண்டாக்கும், இந்த தேர்தல் மாயாவதின் தேர்தலாக அமைந்துவிட நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவே நினைக்கிறேன், லாலுவும், சிபுசோரனும் இன்னும் ஒரு குழப்பமான தேர்தல் முடிவுக்கு வித்திட்டிருக்கிறார்கள், அவர்களின் கூட்டணி தொடர்பான முடிவுகள் சரியான பலனைத்தரும் என்று தோன்றவில்லை.

 

மகராஷ்டிரா நிலமையும் ஒரு குழப்பத்தில்தான், சரத்பவாரின் நிலையில் உள்ள குழப்பங்கள் பிரதமர் ஆசை போன்றவை என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை, சிவசேனாவின் முடிவுகள் சரத்பவாருக்கு சாதகமாக இருக்க கூடும் தேர்தலுக்கு பின் ஆனால் அங்கு சீட்டுக்கள் சிதறிப்போகும் வாய்ப்புகள் இருக்கின்றன,

 

ராஜஸ்தான் குஜராத் இரண்டும் ஒரு வகையில் பிஜெபிக்கு சாதகமாக போகலாம்.

 

இப்படி குழப்பங்கள் மிக அதிகமான தேர்தல் இதுவாகத்தான் இருக்கும், எக்கச்சக்கமான கட்சிகள் என்பதால் யாரும் யாரையும் விடமுடியாத நிலை எங்கும் காணப்படுகிறது, உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு அரசியல் நிலைமை இங்கு, இடதுசாரிகள் மிக மோசமான நிலைக்கு இந்ததேர்தலில் கொண்டு செல்லப்படலாம்.

 

உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டு கிடக்கிற நிலையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று என்பது நிச்சயம், இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் மிக மோசமான பொருளாதார பிரச்சினையால் திணறிக்கொண்டிருக்கிறார்கள், அதில் இருந்து மீள அவர்களுக்கு இந்தியா சீனா போன்ற நாடுகளுடனான வர்த்தகம் மிக முக்கியம், அதற்கு இந்தியாவில் அமையப்போகும் அரசின் செயல்பாடு இடதுசாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் போகாமல் இருக்க வேண்டியது அவசியம்.

 

ஒகே.

 

தேர்தல் கிட்ட நெருங்கி கிட்டே இருக்கு, அவங்க அவங்க வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கலாம் ஆனா பகுத்தறிவு பண்பாளர்கள் எல்லாம் அஷ்டமி நவமின்னு பார்க்க வேண்டி இருக்கிறதால கொஞ்சம் லேட்டாதான் வருவாங்க, அது பிரச்சினை ஆகாம இருக்கனும் இல்ல, நவமி ராமருக்கு உகந்த நாள் அப்படிங்கறதால யாராவது பி.ஜே.பி காரங்க தாக்கல் பண்ணாலும் பண்ணலாம்.

 

அது போகட்டும் இந்த தேர்தல் கமிஷன் வேற கடுமையான சட்டம் எல்லாம் போட்டு படுத்தறாங்கப்பா? நாலுபேர்தான் மனு கொடுக்கிறவங்க கூட போகனுமாம், 3 கார் மட்டும்தான் அனுமதியாம், ஊர்வலம் எல்லாம் போகக்கூடாதுன்னு கண்டிப்பா நம்ம தேர்தல் கமிஷன் சொல்லிட்டதுனாலா நம்ம வேட்பாளர்களுக்கு செலவு குறையும் என்று சந்தோஷம் எல்லாம் படாதீங்க,

 

அப்புறம் இந்த பிரச்சாரம் பற்றி பல விஷயங்கள் நாம் கவனிக்கணும் பல மாதிரி கண்டிஷ்ன்கள் இருப்பதால் அதெல்லாம் பெரிய சங்கடமாக இருக்கிறது, அதோடு தினந்தோறும் வேட்பாளர்கள் மாற்றப்படும் வாய்ப்புகள் இருப்பதால் பல வேட்பாளர்கள் ஏப்ரல் 27 க்கு பிறகு தொடங்கலாம் என்று இருக்ககூடும், பின்ன எல்லாம் சுவரும் எழுதி எல்லாம் முடிந்த பிறகு நீ இல்ல தம்பி வேற ஆள மாற்றிட்டோம்னு சொன்னா என்ன ஆவும், எனக்கென்னமோ இவ்வளவு நாள் யோசிச்சு ஒரு வேட்பாளர் அறிவிச்ச பின்ன எப்படி ஒரிரு நாளில் அவர் பொருத்தமில்லாதவர் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ.

 

அது போகட்டும் நாம் என்ன செய்ய வேண்டும் , அவசியம் ஓட்டு போடவேண்டும் கேரளாவில் 72 சதவீதம் ஓட்டு பதிவாகியிருக்கிறது, அது படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதாலா? இல்லை படித்தவர்கள் பெரும்பாலும் ஓட்டு போடுவதில்லை, அங்கே உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனது ஆட்சியாளனை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு மிக முக்கியமானதாக இருப்பதாக உணர்கிறான், பேப்பர் படிக்காத அரசியல் பேசாத மலையாளிகள் எனக்கு தெரிந்தவரை மிக மிக குறைவு. நம் மாநிலத்தில் அரசியல் பேசுவது ஏதோ வேலைவெட்டி இல்லாதவன் பணி போல ஆகிவிட்டது.

 

நமது மாநிலத்தில் ஓட்டு போடுவதில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது, போன உள்ளாட்சி தேர்தலில் “ஏன்மா நீங்க ஓட்டு போடவந்தீர்கள் இங்கே பிரச்சினை இருக்குன்னு தெரியும்ல” என்று போலிசாரே கேட்டதெல்லாம் பத்திரிக்கையில் வந்தது அதனால் ஓட்டு போடுவதற்கு முன் உங்களுக்கு பிடிகாதவர்கள் யாராவது இருந்தால் அனுப்பி பார்த்து விட்டு பின்னர் சென்று பார்க்கலாம் என்று எனது நண்பன் அறிவுரை கூறினான்,அதை உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியுமா என்று புரியவில்லை.

 

ஆனால் ஓட்டு போடுவது மிக முக்கியமான கடமை என்று நாம் புரிந்து கொண்டு எல்லோரும் வருவார்கள் என்று தெரிந்தால் வன்முறைகள் குறையும் என்று நான் நம்புகிறேன்,

 

தவநெறிச்செல்வன்

Apr 12, 2009

தொடங்கி விட்டது முதல் கூத்து.

இன்றைய செய்தி :

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார் புதியவர் பெயர். கே.கே.பாலசுப்ரமணியம்

திருவள்ளூர் புதிய வேட்பாளர் பெயர்: இன்பராஜ்.


காரணம் : அரசியல், சமூக மற்றும் பொருளாதாரம்

கொசுறு:

தேமுதிக மதுரை வேட்பாளர்,
திமுக ராமநாதபுரம் வேட்பாளர்.
மாற்றப்படலாம்.

காங்கிரஸ்:
இன்னமும் ஒரு முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.

தமிழகத்தில் நான்காவது கூட்டணி வந்தாச்சுங்கோ?
சரத்குமார் தலைவராக இருக்ககூடும்

தினமலர் செய்தி.


செல்வன்

Apr 6, 2009

தேர்தல்-09 போகிறபோக்கு:மாயாவதியா ஜெயலலிதாவா

இப்போது திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில் புதிய வியூகங்கள் தோன்றுகின்றன, நான் முன்பு கூறியது போல தேர்தல் கடைசிநாள் வரையில் இப்படிபட்ட குழப்பங்களை இந்த தேர்தல் கொடுத்து கொண்டே இருக்கும்.

அகில இந்திய அளவில் தேர்தலின் பலம் போட்டி நிலைகள் இப்படித்தான் உள்ளன
காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதும் மாநிலங்கள் இவையே.

1.ராஜஸ்தான்,--25
2.குஜராத் --26
3.மத்திய பிரதேசம் --29
4.டெல்லி --7
5.சட்டிஸ்கர் --11
6.உத்ரகண்ட் --5
7.கோவா.--2
இந்த ஏழு மாநிலங்களில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கை=105.

இதில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் பாஜக இரண்டுமே ஒரு சமநிலையில்தான் உள்ளதாக தோன்றுகிறது ஆனால் தற்போதைய சட்டசபைத்தேர்தல்கள் முடிவுகள் வைத்துபார்த்தால் அது பிஜேபிக்கு சாதகமாக உள்ளது.

இந்த மாநிலங்களைத்தவிர மற்றதில் இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் மூன்றாவது ஒரு அணி அல்லது கட்சியும் உண்டு அதன் விபரம்.

1.கர்நாடகா-28
2.ஒரிஸ்ஸா -21
3.ஆந்திரா - 42
4.மஹராஷ்டிரா -48
5.அஸ்ஸாம் -14
6.பஞ்சாப் - 13
7.கேரளா - 20

இதில் உள்ள மாநிலங்களின் மொத்தம் 186

இதில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக நான் கருதுகிறேன், ஆனால் கர்நாடகாவும் ஒரிஸ்ஸாவும் எத்தகைய முடிவைதரும் என்பது குழப்பமாகவே இருக்கிறது. என்றாலும் இது காங்கிரசுக்கு சாதகமாகவரும் பட்சத்தில் காங்கிரஸின் ஆட்சிகனவு சாத்தியப்படும்.

பிராந்திய கட்சிகளின் கூட்டனிக்குள் உள்ள மாநிலங்கள் பின் வருகின்றன
1.தமிழ்நாடு-39
2,பீகார்- 40
3.மேற்கு வங்கம் -42
4.உத்தர்பிரதேசம் -80
5.ஜார்கண்ட்-14
6.ஹரியானா-10
இந்த மேற்கண்ட மாநிலங்களின் தொகுதிகள் மொத்தம் -224

இந்த மாநிலங்கள் மிகவும் அதிக பிரதிநிதிகளை கொண்டிருந்தாலும் இவற்றில் எதுவும் காங்கிரஸூக்கோ பிஜேபிக்கோ தனி செல்வாக்கு உள்ள மாநிலமாக இல்லாமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான விஷ்யம். இந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் வெற்றியைப்பொருத்தே பிஜேபி அல்லது காங்கிரஸின் ஆட்சிக்கனவு பலிக்கும். இதில் தேர்தலுக்கு பின் பிஜேபியைவிட காங்கிரஸீக்கே இவர்களுடன் கூட்டணி வைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

மற்ற மாநிலங்கள் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கும் அளவுக்கு சீட்களின் எண்ணிக்கை இல்லை என்பதால் அவைகள் ஏதாவது ஒரு அணியில் பங்குபெறக்கூடும்

மொத்தததில் வரும் தேர்தல் முடிவுகள், மாயாவதியை பிரதமராக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம், ஜெயலிதாவும் தனது வெற்றியின் அளவைப்பொருத்து அந்த போட்டியில் பங்கு வகிக்க முயலலாம், ஆனால் இந்த இருவரும் இரண்டு வேறு வேறு துருவங்கள், ஆனால் இருவரின் அணுகுமுறைகளும் பல ஒற்றுமைகளை பெற்றுள்ளன.

காங்கிரஸ் தற்போதைய இடங்களைகாட்டிலும் குறைவான அளவைப்பெற்றால் நிச்ச்யம் நமது பிரதமர் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்தான். அது இன்னுமொரு புதிய ஜனநாயக வடிவமாக மாறும்.

தவநெறிச்செல்வன்