Apr 6, 2009

தேர்தல்-09 போகிறபோக்கு:மாயாவதியா ஜெயலலிதாவா

இப்போது திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில் புதிய வியூகங்கள் தோன்றுகின்றன, நான் முன்பு கூறியது போல தேர்தல் கடைசிநாள் வரையில் இப்படிபட்ட குழப்பங்களை இந்த தேர்தல் கொடுத்து கொண்டே இருக்கும்.

அகில இந்திய அளவில் தேர்தலின் பலம் போட்டி நிலைகள் இப்படித்தான் உள்ளன
காங்கிரஸ் மற்றும் பாஜக நேரடியாக மோதும் மாநிலங்கள் இவையே.

1.ராஜஸ்தான்,--25
2.குஜராத் --26
3.மத்திய பிரதேசம் --29
4.டெல்லி --7
5.சட்டிஸ்கர் --11
6.உத்ரகண்ட் --5
7.கோவா.--2
இந்த ஏழு மாநிலங்களில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கை=105.

இதில் தற்போதைய நிலையில் காங்கிரஸ் பாஜக இரண்டுமே ஒரு சமநிலையில்தான் உள்ளதாக தோன்றுகிறது ஆனால் தற்போதைய சட்டசபைத்தேர்தல்கள் முடிவுகள் வைத்துபார்த்தால் அது பிஜேபிக்கு சாதகமாக உள்ளது.

இந்த மாநிலங்களைத்தவிர மற்றதில் இவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் மூன்றாவது ஒரு அணி அல்லது கட்சியும் உண்டு அதன் விபரம்.

1.கர்நாடகா-28
2.ஒரிஸ்ஸா -21
3.ஆந்திரா - 42
4.மஹராஷ்டிரா -48
5.அஸ்ஸாம் -14
6.பஞ்சாப் - 13
7.கேரளா - 20

இதில் உள்ள மாநிலங்களின் மொத்தம் 186

இதில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக நான் கருதுகிறேன், ஆனால் கர்நாடகாவும் ஒரிஸ்ஸாவும் எத்தகைய முடிவைதரும் என்பது குழப்பமாகவே இருக்கிறது. என்றாலும் இது காங்கிரசுக்கு சாதகமாகவரும் பட்சத்தில் காங்கிரஸின் ஆட்சிகனவு சாத்தியப்படும்.

பிராந்திய கட்சிகளின் கூட்டனிக்குள் உள்ள மாநிலங்கள் பின் வருகின்றன
1.தமிழ்நாடு-39
2,பீகார்- 40
3.மேற்கு வங்கம் -42
4.உத்தர்பிரதேசம் -80
5.ஜார்கண்ட்-14
6.ஹரியானா-10
இந்த மேற்கண்ட மாநிலங்களின் தொகுதிகள் மொத்தம் -224

இந்த மாநிலங்கள் மிகவும் அதிக பிரதிநிதிகளை கொண்டிருந்தாலும் இவற்றில் எதுவும் காங்கிரஸூக்கோ பிஜேபிக்கோ தனி செல்வாக்கு உள்ள மாநிலமாக இல்லாமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான விஷ்யம். இந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளின் வெற்றியைப்பொருத்தே பிஜேபி அல்லது காங்கிரஸின் ஆட்சிக்கனவு பலிக்கும். இதில் தேர்தலுக்கு பின் பிஜேபியைவிட காங்கிரஸீக்கே இவர்களுடன் கூட்டணி வைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

மற்ற மாநிலங்கள் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கும் அளவுக்கு சீட்களின் எண்ணிக்கை இல்லை என்பதால் அவைகள் ஏதாவது ஒரு அணியில் பங்குபெறக்கூடும்

மொத்தததில் வரும் தேர்தல் முடிவுகள், மாயாவதியை பிரதமராக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம், ஜெயலிதாவும் தனது வெற்றியின் அளவைப்பொருத்து அந்த போட்டியில் பங்கு வகிக்க முயலலாம், ஆனால் இந்த இருவரும் இரண்டு வேறு வேறு துருவங்கள், ஆனால் இருவரின் அணுகுமுறைகளும் பல ஒற்றுமைகளை பெற்றுள்ளன.

காங்கிரஸ் தற்போதைய இடங்களைகாட்டிலும் குறைவான அளவைப்பெற்றால் நிச்ச்யம் நமது பிரதமர் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்தான். அது இன்னுமொரு புதிய ஜனநாயக வடிவமாக மாறும்.

தவநெறிச்செல்வன்

1 comment:

  1. இந்த தேர்தல் எப்பொழுதும் போல் இல்லாமல், ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த போவதாக எல்லோரும் சொல்கிறார்கள், தேர்தலுக்கு பிறகு கூட்டணிகள் அடிக்கும் கூத்துக்களை பார்க்க காத்துகொண்டிருக்கிறேன்.
    அன்புடன்
    ஜீவா

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்