Oct 3, 2008

வில்லியமின் தேசம்

ஒரு பெரிய நிலப்பரப்பு, மலைகளும் சின்ன சின்ன ஓடைகளும் நிறைந்த வளமான பூமி, அங்கங்கே காடுகளும் சிறிய களர் நிலங்களும் நிறைந்த ஒரு இயற்க்கையின் படைப்பு சின்ன சின்ன கிராமங்களாக மனிதர்கள் வெவ்வேறு இனங்களாக பிரிந்து பெரிய தலைமையோ சட்டதிட்டங்களோ இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ரூவன் என்ற ஊரைச்சேர்ந்த வில்லியம் என்கிற வீரன் தன் நகரத்தை தனக்கு கட்டுப்பட்டதாக அறிவித்து அதன் மன்னராக தன்னை ஆக்கிகொள்கிறான் அவனின் அந்த முடிவுக்கு பெரிய எதிர்பில்லாமல் போகவே அவன் அது முதல் அந்த நகரத்தின் நிர்வாகத்தை விரிவுபடுத்த முயல்கிறான்,

அதே நேரத்தில் ரூவன் நகரத்தில் இருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கப்பால் சோனோரி என்ற வீரன் தனது ஜெல்லிங் என்ற நகரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னை மன்னனாக அறிவித்துக்கொள்கிறான். மற்ற கிராமங்களும் நகரங்களும் தனித்தனியே இயங்கி கொண்டிருக்கின்றன,

வில்லியம் தனது மக்கள் விவசாயம் மட்டுமே கொண்டு வாழ்வதை விரும்பவில்லை தனது மக்களில் நல்ல அறிவுள்ளவர்களை தேர்ந்தெடுத்து புதிய தொழில்களை தொடங்க ஆலோசனை கேட்கிறான் அவர்கள் சில பேர் பக்கத்து நகரங்களை தாக்கி அதனை அடிமைகொண்டு நமது பொருளாதாரத்தை அதிகரிக்கலாம் என்று சொல்கிறார்கள், ஆனால் போரிடுவதை பெரிதும் விரும்பாத வில்லியம் வேறு வழிகளை கோருகிறான், அதில் ஒருவன் நிகல் ருசல் அவன் சொல்கிறான் நமது நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தாமிர குகைகள் இருக்கின்றன அவைகளை வெட்டி எடுத்தால் பக்கத்து நகரங்களில் விற்பனை செய்யலாம் என்று கூறுகிறான், அது வில்லியமுக்கும் பிடிக்கிறது நிகலை தனது அமைச்சராக ஆக்கிகொள்கிறான்.

பக்கத்தில் உள்ள தாமிர சுரங்கத்தில் இருந்து தாமிரம் எடுக்கப்படுகிறது அது தொழிற்ச்சாலைகள் மூலம் தாமிர பாத்திரங்கள் செய்யப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, நிகல் தனது உதவியாளர்கள் மூலம் அந்த நிலப்பரப்பில் எங்கெல்லாம் இதுபோல் தாதுக்கள் கிடைக்கிறது என்று கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பி வைத்தான், ஆனால் இத்தனைக்கும் இடையில் பொருளாதாரம் கூடிக்கொண்டேவந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு உற்பத்தி குறையத்தொடங்கியது, பெரும்பாலான மக்கள் அதிக சம்பளத்திற்காக சுரங்கத்திலும் தொழிற்சாலைகளும் பணிபுரிய தொடங்கியதில் விவசாயம் பிந்தங்கியதுதான் காரணம், வில்லியம் மீண்டும் அறிவாளிகளின் கூட்டத்தை கூட்டினான், அவர்கள் மக்கள் தொகை பெருக்கம்தான் ஓரேவழி என கூறி சண்டைக்கு தாயாராக வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்கள் ஆனால் நிகல் மீண்டும் அதை மறுத்தான் மேலும் அவன் தனது உதவியாளர்கள் மூலம் அறிந்த ஒரு செய்தியை கூறினான், ரூவன் நகரத்தில் இருந்து 500 மைல் தூரத்தில் பாஸிங்காம் என்ற நகரம் உள்ளது அதன் இனத்தவர்கள் நமது மொழியே பெசுவதாகவும் அவர்களை நமது மன்னர் பரிவாரங்களுடன் சென்று சந்தித்தால் அல்லது அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து பேசினால் அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ சம்மதிப்பார்கள் என்றான்.

வில்லியம் போரில்லாத இந்த வழி பிடித்திருந்ததால் ஓப்புக்கொண்டு புறப்பட்டான் பெரும் பரிசுப்பொருட்களும் பலவகை பரிவாரங்களும் சூழ பாஸிங்காம் புறப்பட்டான்,
இதேநேரத்தில் மன்னன் சோனேரி தனது படைகளுடன் பக்கத்து நகரங்களைதாக்கிட திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான் அதனால் அவன் நாட்டில் மக்கள் சற்று கவலையில் இருந்தார்கள், அவர்கள் ஒரு இரும்பு சுரங்கதை கண்டுபிடித்து உழைத்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் சோனேரி தனது படை பலத்தை பெருக்குவதில் ஆர்வம் கொண்டு தனது மக்களின் வரிகளை அதிகப்படுத்தி இருந்தான்.

வில்லியம் பாஸிங்காம் சேர்ந்து தனது பரிவாரங்களுடன் நகரத்துக்கு வெளியே கூடாரம் அமைத்து காத்திருந்தான், பாஸிங்காம் நகர பெரியவர்கள் மன்னனை சந்தித்து உரையாடினார்கள் அவனின் நொக்கத்தை புரிந்துகொண்டார்கள் அவனின் பரிசுப்பொருட்களும் அவர்களை மகிழ்ச்சி படுத்தின அவர்களுக்கு அந்த முறைகள் பிடித்திருந்தன பல சுற்று பேச்சுக்களுக்கு பிறகு அவர்கள் அவன் அதிகாரத்திற்கு கீழ் வர ஓப்புக்கொண்டார்கள் ஒப்புக்கொள்ளாத சிலர் பணத்தாலும் மிரட்டலாமும் பணியவைக்கப்பட்டார்கள் பெரிய இழப்புகள் இன்றி பாஸிங்காம் நகர மக்கள் ரூவன் நகரத்திற்கு பக்கத்திலேயே புதிய பாட்டில் என்ற நகரம் உருவாக்கப்பட்டு தங்கவைக்கபட்டார்கள்

இப்போது வில்லியம் நிர்வாகத்தில் உணவு உற்பத்தி பொருளாதாரம் எல்லாம் நல்ல நிலைக்கு வந்தது, வியாபாரம் எல்லா கிராம்மங்களுக்கும் விரிந்தது, மற்ற மக்களிடமும் வில்லியம் அரசனின் புகழ் பரவத்தொடங்கியது, பல்வேறு இனத்தவர்கள் வில்லியம் நாட்டுக்கு பிழைக்கவும் பொருளீட்டவும் வரத்தொடங்க்கினார்கள்.

சோனேரி மன்னனும் பல போர்களினால் பல நகரங்களை பிடித்திருந்தான் அவன் நாடும் விரிவடைந்து கொண்டிருந்தது அவன் புகழும் தனது உதவியாளர்கள் மூலம் அமைச்சர் நிகல் காதில் விழுந்தது, அவர் உடனே மன்னனை சந்தித்து பாதுகாப்பு விஷயங்களை பற்றி பேசினார் புதிதாக கோட்டைகள் கட்டப்பட்டன புதிய வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர், ஆனால் போரில் விருப்பமில்லாத வில்லியம் தனது தூதுவர்களை சோனரி நாட்டுக்கு அனுப்பி வர்த்தக உறவு கொள்ள விரும்பினான், வில்லியம் நாட்டின் வளங்கள் பற்றி கேள்விப்பட்ட சோனரியும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு நாடுகளும் வளர்ந்து கொண்டே வந்தன, இந்நிலையில் மக்களின் பொருளாதாரத்தேவை அதிகரிக்க தொடங்கியது வேலைவாய்ப்பும் கூடுதலாக தேவைப்பட்டபோது நிகல் தனது உதவியாளர்கள் மூலம் கண்டுபிடித்த தாது சுரங்கள் எல்லாம் நோண்டப்பட்டன பெரும் பொருள்கள் பல்வேறு வண்டிகள் குதிரைகள் ஒட்டகங்கள் மூலம் ரூவன் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டன களிமண் இருப்பு தாமிரம் போன்றவற்றில் செய்த பொருட்களுக்கு நல்ல தேவை இருந்தது அது சம்பந்தமான தொழிற்கள் தொழிற்சாலைகள் அது சார்ந்த நகரங்கள் ரூவன் நகரத்தை சுற்றி உண்டாகிக்கொண்டே வந்தன.

மற்ற நகரங்களை சேர்ந்த மக்களுடன் வில்லியமின் ஆட்கள் சென்று பேச்சு வார்த்தை மற்றும் சின்ன நிர்பந்தங்களும் பிறகு பெரிய பரிசுகளும் கொடுத்து தங்கள் வசம் கொண்டுவந்தார்கள், அவர்களுக்கு புதிய தொழிற்மையங்கள் தொடங்கப்பட்டன, மக்களிடம் நல்ல பெயருடன் வில்லியம் தொடர்ந்து ஆண்டு கொண்டு வந்தான்.

ஆனால் அமைச்சர் நிகலுக்கு சோனரி நாட்டின் மீது அவ்வளவு நம்பிக்கையில்லை அவனின் நாடு பிடிக்கும் வெறி அவருக்கு புரிந்தது அதனால் தனது நாட்டை பாதுகாப்பானதாக விரும்பினார், ஆனால் வில்லியம் தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் கவலை கொண்டிருந்தான், கொஞ்சம் கொஞ்சம் புதிய கோட்டைகள் கட்டப்பட்டாலும் பெரும்பாலும் போதிய வீரர்கள் இல்லாமலேயே அவைகள் இருந்தன, தொழிற் ரீதியாக சோனரி நாட்டுடன் சிறிய பினக்குகள் தோன்றிக்கொண்டிருந்தன, அஹர் என்ற நகரம் சோனரி நாட்டின் முற்றுகையில் இருந்த போது அது வில்லியம் நாட்டிடம் தன்னை அடிமைப்படுத்திக்கொண்டதில் சோனரிக்கு கோபம் அதிகம் இருந்தது.

சோனரியின் தொடர் போர்களால் நாடு பெரிதானாலும் மக்கள் பெரும் எதிர்ப்பு மனநிலையில் இருந்தார்கள் ஆகையால் அவன் வில்லியம் நாட்டின் மீது இப்போதைக்கு போர் தொடுக்க முடியாமல் இருந்தான், தனது ஒற்றர்கள் மூலம் இதெல்லாம் அறிந்த நிகல் வில்லியம் மன்னனை எச்சரித்தான். அதனால் புதிய கோட்டைகள் கட்டப்பட்டன புதிய வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டன, வரியில்லாமல் இருந்த வில்லியம் நாட்டில் புதிய வரிகள் இடப்பட்டன பொருளாதாரம் பாதுகாப்புக்காக திருப்பிவிடப்பட்டது என்றாலும் மக்கள் பெரிதும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது போல் வரிகள் கடுமையாக்கப்படாமல் கவனிக்கப்பட்டது.

வில்லியம் நாட்டில் புதிய புதிய மொழிபேசும் மக்களும் அவர்களை நிர்வகிக்க அவர்களின் இனங்களை சேர்ந்த தளபதிகள் நியமிக்கப்பட்டனர் நல்ல சேவை செய்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன, எல்லா நகரங்களும் அந்தந்த தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தன அவர்கள் அங்கங்கே கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கங்கள் மூலம் கொண்ட வருமானங்கள் மூலம் நகரத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டன மக்கள் மன்னனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டு வாழ்ந்தார்கள் கிட்டதட்ட போரே இல்லாத காலங்கள் அவைகள்.

இந்த நேரத்தில்தான் சோனரி நாடுதனது எல்லா வர்த்தக உறவுகளையும் முறித்துக்கொள்வதாக வில்லியமுக்கு செய்தி அனுப்பியது, வில்லியம் மிக கவலையில் ஆழ்ந்தான், நிகல் உடனடியாக தளபதிகளை அழைக்க கோரினான்,

தளபதிகள் அழைக்கப்பட்டார்கள் எல்லா கோட்டைகளில் இருந்தும் வீரர்கள் சோனரி நாடு செல்லும் வழியில் குவிக்கப்படவேண்டும், புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கோட்டைகளை நிரப்பவேண்டும் என்று உத்திரவு இடப்பட்டது, அதற்குள் சோனரி நாட்டில் இருந்து சண்டை அறிவிக்கப்பட்ட செய்தி வந்தது, இது வரை சண்டை ஏதும் பழக்கப்படாதால் மக்கள் மிகுந்த மனக்குழப்பத்தைல் இருந்தார்கள். மக்களிடம் நம்பிக்கை தளராமல் இருக்க வரிகள் குறைக்க முடிவுசெய்யப்பட்டது.

வில்லியமிடம் ஒன்பது கோட்டைகள் இருந்தன அத்தனையிலும் பயிற்றுவிக்கப்பட்ட வீரர்கள் இருந்தார்கள், ஆனால் சோனரி பதினைந்து கோட்டைகளைக்கொண்டிருந்தான் அவர்களும் நல்லப்பயிற்சி பெற்று இருந்தார்கள், வில்லியமிடம் நீண்டகாலாமாக போர் செய்யாமல் இருந்ததால் நல்ல உணவு கையிருப்பும் பொருளாதாரமும் மக்கள் நல்ல நிலையிலும் இருந்தார்கள் ஆனால் சோனரியிடம் உணவு கையிருப்பு மற்றும் பொருளாதாரம் மக்கள் மனநிலைமை எல்லாமே மோசமாகைருந்தது,

போரின் முழு முடிவுகளுக்கும் தலைமை தளபதி கிப்போர்டு வசம் கொடுக்கப்பட்டன என்றாலும் அவர் நிகலை கேட்டே திட்டங்களை வகுத்துகொண்டிருந்தார். கிட்டதட்ட எல்லா கோட்டையில் இருந்தும் வீரர்கள் சோனரி நாட்டுக்கான பாதையில் குவிக்கப்பட்டார்கள் வீரர்கள் குறையும் போது புதிய வீரர்கள் கோட்டைகளில் இருந்து அனுப்பபடவேண்டும் என உத்தரவு இடப்பபட்டது,

சோனரி நாட்டுப்படைகள் புறப்பட்டு விட்ட செய்தி வந்தது, நிகல் எதிர்பார்த்தது போலவே இரண்டு இரண்டு கோட்டைகளில் இருந்தே வீரர்கள் கொண்டுவரப்பட்டனர்.
அவர்கள் நீண்டதூரம் வந்து களைத்துப்போன நிலையின் வில்லியம் வீரர்களை எதிர் கொண்டனர் கடும் யுத்தம் நடந்தது இறக்க இறக்க புதிய புதிய வீரர்கள் வந்து கொண்டே இருந்தனர் இரண்டுபக்கமும் வீரர்கள் இறந்து கொண்டே இருந்தனர், புதிய வீரர்கள் வேறு வழி புகுந்து நகரங்களுக்குள் தாக்க தொடங்கினார்கள் நல்லவேளையாக கோட்டைகளில் புதிதாக பயிற்சியில் இருந்த வீரர்கள் அவர்களுடன் போரிட்டு மடிந்தார்கள்.

கிட்டதட்ட ஏழு நாட்கள் போர் கடந்த நிலையில் இரண்டுபக்கமும் கடும் இழப்புகள் இருந்தன பல தளபதிகள் இரண்டுபக்கமும் மடிந்திருந்தார்கள், போர் சற்று வில்லியம் பக்கம் சாதகமாக இருந்தாலும் சோனரி வீரர்கள் தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தார்கள் ஒரு கட்டத்தில் எல்லா பயிற்றுவிக்கப்பட்ட வீரர்களும் மடிந்து புதிய வீரர்கள் நேரடியாக நகரங்களில் இருந்து வரவேண்டிய நிலை, மக்களிடம் நம்பிக்கை வேறு குறைய தொடங்கிவிட்டது, வில்லியம் இரண்டு முறை போர் நிறுத்தம் கோரி தூது அனுப்பினார் ஆனால் அது சோனரியால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நிகலின் ஒற்றர் படையினர் சோனரின் நகர மக்களிடையே ஊடுருவி இருந்தனர் பெரும் எண்ணிக்கையில், அவர்கள் மக்களிடையே சோனரி நாட்டின் பொருளாதார நிலைகளையும் போரின் அழிவுகளையும் எடுத்துக்கூறி மக்களை போராட்டத்துக்கு தூண்ட சோனரி நாட்டின் பல இடங்களில் மக்கள் திரண்டு அரசு அலுவலகங்கள் கோட்டைகள் போன்றவற்றை தாக்க தொடங்கினார்கள். சோனரி மன்னன் திகைத்துப்போனான் அவனுடைய வீரர்கள் உடனடியாக கலவரங்களை அடக்க திருப்பி விடப்பட்டனர். நிகல் தனது படைவீரர்களை முன்னேறி சொனரி நாட்டு கோட்டைகளை தாக்க உத்தரவிட்டார், ஆனால் அதற்குள் சோனரி மன்னன் போர் நிருத்தம்கோரி தூதுவனை வில்லியமிடம் அனுப்பினான், போரில் விருப்பமில்லாத வில்லியம் உடனடியாக ஒப்புக்கொள்ள நிகலின் கட்டளைப்படி சோனரி கோட்டைகளை தாக்கப்போன படைகள் நாடு திரும்ப வேண்டியதாகிவிட்டது

ஒரு வழியாக போர் நின்றதும் நாட்டின் பராமரிப்பு பணிகளில் வில்லியம் ஆர்வம் காட்டினார் நல்லவேளையாக பொருளாதாரம் பாதுகாப்பாக இருந்தது உணவும் குறையவில்லை, கோட்டைகள் புதிபிக்கபட்டன, இறந்த வீரர்களுக்கு பதக்கங்களும் கெளரவமும் வழங்கப்பட்டன.
சோனரியின் நாட்டில் தொடர்ந்து கலவரங்கள் ஏற்படுவதும் அதை அடக்குவதுமாய் பெரிதும் இழப்புகள் இருந்தன, மக்கள் தொகையும் குறைந்து உணவு பற்றாக்குறையும் வந்தது, உணவு உதவிகேட்டு வில்லியம் நாட்டுக்கு தூதுவர்களை அனுப்பவேண்டிய நிலைக்கு வந்தது, வில்லியம் உணவும் பொருளாதார உதவியும் அளித்ததோடு வர்த்தக உறவுக்கும் விருப்பம் தெரிவித்து தொடர்ந்தார் என்றாலும் சொனரியின் நாடு பழய நிலையை அடைய கொஞ்சகாலம் பிடிக்கும் என்பது அமைச்சர் நிகலுக்கு புரிந்தது.


அவருக்கு போரினால் ஏற்ப்பட்ட சங்கடங்கள் புரிந்திருந்தன, வில்லியமுக்கு போரில் விருப்பமில்லை கூடவே உயிரிழப்புகளிலும் விருப்பமில்லை எனவே பாதுக்காப்பு விஷயத்தில் புதிய யுக்திகளை கையாள வேண்டும் என்று விரும்பினார், புதிய சிந்தனைகளை வரவேற்க அறிஞர்கள் கொண்ட சோதனைசாலை ஒன்றை உருவாக்க முடிவுசெய்து செயலாக்கினார் அவர்கள் புதிய பாதுக்காப்பு யுத்திகளை ஆராய தொடங்கினார்கள், கூடவே நாட்டின் புதிய முன்னேற்றங்களையும் சிந்திக்க தொடங்கினார்கள்.

சோனரி நாட்டின் நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது, அவர்களின் புதிய செயல்கள் வில்லியம் நாட்டிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வர்த்தக சந்தைகள் மாற்றப்பட்டன,

நகரங்கள் வெளியாட்கள் புகாத வண்ணம் அமைக்கப்பட்டன எல்லா நிலைகளிலும் பாதுக்காப்பு கோட்டைகள் கட்டப்பட்டன. சோதனை நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாக்குதல் ஆயுதங்கள் கட்டாபில்ட்,பீரங்கிகள் உருவாக்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன அவைகள் எண்ணற்ற தளவாடங்களை செய்து குவித்தன, சோனரியின் ஒற்றர்கள் புதிய ஆயுதங்களை பற்றிய ரகசியங்களை திருடி தனது நாட்டிலும் தொழிற்சாலைகளை நிறுவி தளவாட தயாரிப்புகளை தொடங்கினார்கள், ஆனாலும் பொருளாதார பற்றாகுறை காரணமாக பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை,

இப்போது சோனரி நாடு தனது ராணுவ நிலைகளை அதிகரிக்கும் போதெல்லாம் வில்லியம் நாட்டு பீரங்கி படைகள் தற்காலிக போர் அறிவித்தலுடன் சென்று அவைகளை தகர்த்துவிட்டு வந்து விடுகின்றன, மற்றபடி பெரிய போர் இழப்புகள் இல்லாமல் சிறிய போர்களுடன் இரண்டு நாடும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.அப்பப்போது சோனரி என்ற குட்டி நாட்டுக்கு வில்லியம் நாடு நிதி உதவி செய்து வருகிறது, அந்த நிதிகள் போர் தளவாடங்களுக்கு திருப்பி விடப்பட்டால் அதுவும் உடனடியாக அழிக்கப்படுகிறது.


செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்