Oct 11, 2008

தமிழில் எழுதலாம் வாருங்கள். உளறல்-6

எல்லோருக்கும் தமிழில் எப்படி எழுதுவது என்ற கவலை இருக்கும், அது பல இணைய தளங்களால் மிகவும் எளிதாக தரப்பட்டுள்ளது அதிலிருந்து, அதனை எப்படி உபயோகிக்கலாம் என்கிற முறையை இதனுடன் இணைத்துள்ளேன், அனைவருக்கும் எளிதில் புரியும் என்றே நினைக்கிறேன், ஏதும் ஐயங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள், எவ்வளவு சிறியதான குழப்பமாக இருந்தாலும் தயக்கமின்றி கேளுங்கள் என்னால் முடிந்தவரை உதவுகிறேன். எழில்நிலா இணைய தளத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

1. முதலில் இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்
http://www.ezilnila.com/



2. மேலே படம் ஒன்றில் உள்ள மென்பொருள் பகுதியை தேர்ந்தெடுங்கள்


3. மேலே படம் இரண்டில் உள்ள download eKalappai என்பதை click செய்யுங்கள்,



4.மேலே மூன்றில் உள்ள Run button னை click செய்யுங்கள்

5. நான்காவது செயல் முடிந்த பிறகு புதிய eKalappai downlaoad ஆகும், அதன் பின் மேலே படம் நான்கில் காணும் படத்தில் உள்ள Run buttonனை click செய்யவும்


6. இப்போது மேலே படம் ஐந்தில் உள்ளது தோன்றும் இதில் உள்ள install button னை click செய்யவும்.
7. இப்போது licence agreement வரும் அதனை Accept click செய்யுங்கள்

8. அதன் பின் Installation complete ஆனதும் close செய்யுங்கள்.


இப்போது தமிழ் டைப் செய்ய வேண்டிய முறைகள் முடிந்து விட்டன,






9. இப்போது Ms-word செல்லுங்கள் அங்கே
மேலே படம் ஆறில் உள்ளது போல் font selection ல் TSCu_Paranar என்கிற font யை select செய்யுங்கள்.
இப்போது படம் ஏழில் உள்ளது போன்று உங்கள் கணினியின் கீழ்பகுதியில் காணப்படும், அது உங்கள் மென்பொருள் சரியாக நிறுவப்பட்டு செயல்படுவதை உறுதி செய்கிறது, இப்போது Alt+2
பட்டனை அழுத்துங்கள் இப்போது படம் எட்டில் உள்ளது போல் என மாறும்

அவ்வளவுதான் இப்போது நீங்கள் தமிழில் எழுதலாம்

Type செய்யும் போது கவனிக்க வேண்டியவை.

அம்மா என்பதை ammaa என்று செய்யவேண்டும்

அன்புடன் என்பதை anpudan என்று செய்ய வேண்டும்

ழ என்பது za ஆகவும் ழ் என்பது z ஆகவும் உள்ளது.

ந என்பது wa ஆகவும் ந் என்பது w ஆகவும் உள்ளது.

இது போல மற்ற எழுத்துக்களையும் முயன்று பாருங்கள்.

ஏதும் சந்தேகம் இருந்தால் எனக்கு எழுதுங்கள்.

செல்வம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்