Oct 5, 2008

உளறல்-4


ஒரு நிலையான தருணத்தில் மனதில் ஏற்படும் உணர்வுகளை நாம் நமக்குள்ளே கூர்ந்து கவனிப்பதில்லை அதன் ஆழமான வடிவங்கள் பெரும்பாலும் வெளிப்படுத்த முடியாததாக இருப்பதை காணமுடியும், இதை தான் சுய சரிதை அல்லது டைரி எழுத நினைப்பவர்கள் உண்மையை எழுத முடிவதில்லை என்று கூறப்படுகிறது,

உங்களின் தனிமைப்பொழுதில் வரும் எண்ணங்களை கொஞ்சம் வரிசைப்படுத்தி ஒரு காகிதத்தில் எழுதிப்பாருங்கள் எந்த ஒளிவும் இல்லாமல் அது பின்னர் அழித்து விடலாம், அந்த எழுத்தை பிறகு படித்துப்பாருங்கள் அதுதான் உங்களின் உண்மையான சொரூபம், அதை நீங்கள் வெளிப்படுத்தாமல் இருக்கலாம் அல்லது வெளிப்படுத்த விரும்பாமல் இருக்கலாம் அல்லது வெளிப்படுத்த பயமாக இருக்கலாம், இப்படி ஏதாவது ஒரு உணர்வு உங்களுக்குள்ளே அடைப்பட்டு கிடப்பதுதான் மிகப்பெரிய சுமை அது தனது தணிமைப்பொழுதில் வாய்ப்புகளைப்பொருத்து கொஞ்சமோ கூடுதலாகவோ வெளிப்படுகிறது அதன் பலன் அந்த எண்ணத்தின் தன்மையை பொருத்து நல்லதோ கெட்டதோ ஒரு விளைவையும் கொடுக்கும்.

இப்படி தனிமையில் மட்டும் வெளிப்படும் தன்மை நம்மை சுற்றியுள்ளவர்களின் தொடர் நடவடிக்கைகளால் பொது இடங்களிலும் வெளிப்படுகிறது, அதுதான் உங்களை ஒருவகையில் பிரபலமான மனிதனாக மாற்றுகிறது, அந்த பிரபலத்தின் தன்மை எதுவாக இருக்கும் எனபது உங்களின் உண்மையான உள் மனத்தன்மையை பொருத்தது. உங்களின் உள் மனத்தன்மை உங்களை ஒரு ஞானியாகவும் அல்லது ஒரு சேவகனாகவும் அல்லது ஒரு திருடனாகவும் அல்லது ஒரு மனநிலைபாதிக்கப்பட்ட மிருகமாகவும் கூட வெளிப்படுத்த வைக்கலாம்.

சராசரியில் மனிதனுக்குள் ஏற்ப்படும் மன அழுத்தங்களும் இந்த வகையினில்தான் வருகிறது தனது மனம் ஒரு எல்லையை வகுத்து கொண்டு சிரமப்படுகிறது என்கிற உண்மை நிறைய பேருக்கு தெரிவதே இல்லை, அவர்களுக்கு அதை எத்தனை விளக்கினாலும் புரிவதே இல்லை, உதாரணாமாக ஒரு மகன் தன் தந்தை தன்னை டாக்டருக்கு படிக்கவைக்கவில்லை என்று மனதில் ஏற்படுதிக்கொண்டு தான் சாகும் வரைக்கும் தன் தந்தையால்தான் நம் வாழ்க்கை பாழாகப்போனது என்று குற்றம் சொல்லிக்கொண்டிருந்தால் அது எவ்வளவு முட்டாள்தனமாக நமக்கு தோன்றுமோ அப்படித்தான் நாமும் கூட பல விஷயங்களில் அப்படி செயல் படுகிறோம் ஆனால் அதற்கு வசதியான ஒரு காரணம் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் நம்மை நமது குற்ற உணர்வில் இருந்தே காப்பாற்றி விடுகிறது,

ஏதோ ஒரு வகையான கயிறு நம்மையெல்லாம் சில பந்தங்களில் கட்டிவைத்திருக்கிறது அது அறியாமல் நாம் அதை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம், வேறு யாரும் அப்படி நம்மிடம் இல்லை எல்லோரும் ஒரு சுயநலத்தோடுதான் சுற்றி வருகிறார்கள் என்று கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஒரு மனக்குறை இருக்கிறது, நீங்கள் அப்படி உங்களை இணைத்துக்கொள்வதில் என்ன சுகம் கண்டீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப்பார்த்ததுண்டா? நன்றாக நம்புங்கள் எந்த சுகமும் இல்லாமல் நீங்கள் அல்லது எந்த உயினமும் ஒரு செயலை தொடர்ந்து செய்யாது, ஒரு உணவையோ, அன்பையோ, எந்த தேவையும் இல்லாமல் எதுவும் வெளிப்படுத்துவதில்லை,
ஒரு குழந்தை உங்களிடம் வரமறுக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு சில முறைகள் முயன்று பார்பீர்கள் அதன் பிறகு அது நம்மிடம் வராது என்று முடிவுக்கு வந்து தூக்கும் முயற்சியை செய்யக்கூட மாட்டீர்கள், அதாவது அதனால் நமக்கு சந்தோஷம் இல்லை என்று தெரியும்போது உங்களின் அந்த குழந்தைக்கான ஒரு சேவை முடிந்துவிடுகிறது, அப்படித்தான் உங்களின் நண்பர்களுக்கான, உறவினர்களுக்கான சேவையும் உதவியும்,

உங்களால் அவர்களுக்கு தொடர்ந்து உதவியிலோ அல்லது ஆறுதலிலோ இருக்கமுடிகிறது என்றால் நிச்சயம் உங்களுக்கு அதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது என்பதை நம்புங்கள் அதனை எதுவென்று கண்டுபிடியுங்கள்.

இப்போது புரியும் உங்களின் நடவடிக்கைகள் உங்களுக்காக மட்டுமே என்பது, அதன் உண்மையான காரணம், உங்கள் உள் மனதில் ஒளிந்து இருக்கும் அது தெரியும்போது நீங்கள் வருத்தப்பட ஏதும் இல்லாது போவது புரியும்.

வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், இந்த உலகம் ஒவ்வொரு அங்குலத்தையும் உங்களுக்காகவே படைத்து வைத்திருக்கிறது அதில் சென்று பாருங்கள் உலகம் மிகப்பரந்த 350 கோடி மக்களை கொண்ட மிகப்பெரிய விதவிதமான எண்ணங்களைக்கொண்ட கடல் அதனுள்ளே சென்று புதிய மனிதர்களையும் அவர்களின் செயல்களையும் ரசியுங்கள் நம்மைச்சுற்றியுள்ள ஒரு சில மனிதர்களிடம் காணும் குறைகளை சுமந்து கொண்டு திரியாதீர்கள் அது உங்களுக்கு எந்த உதவியும் செய்யாது.


செல்வன்

4 comments:

  1. கருத்து ஓகே
    தலைப்பு "உளறல்" என்று இருக்க வேண்டும். எழுத்துப் பிழை வேண்டாமே!

    ReplyDelete
  2. கருத்துக்கள் சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி எழுத்து பிழைகளை சரி செய்கிறேன் நன்றி

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்