Mar 17, 2011

ஜப்பானில் நடப்பதென்ன? ஒரு எளிமையான விளக்கம்.


இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அணு உலைகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளால் அணு உலைகளை குளிர்விக்கும் அமைப்பு செயல்படவில்லை, கூடவே சாதாரணமாக அணுமின்சாரம் தயாரிக்க உதவும் கதிர் இயக்க பொருளான யுரேனியம் உருளைகள் எப்போதும் நீரின் அடியிலேயே பாதுகாக்கவேண்டும். அல்லது அது வெளியில் தெரியத்தொடங்கினால் அது உருகத்தொடங்கிவிடும். அந்த உருகுவது என்பது மிக மோசமான ஒரு விளைவு. பல அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம். அப்போது ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமான ஒரு அழிவைக்கொடுக்கும்.

அந்த உருளைகள் இருக்கும் ரீயாக்டர் என்கிற கொதிகலனை குளிர்விக்க பல முறைகளை தொடர்ந்து செயல்படுத்திப்பார்த்தும் ஓன்றும் நடைபெறவில்லை,இன்னும் அதன் வெப்பத்தை தணிக்க முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று புரியவில்லை. கடல் நீரை கொண்டும், ஹெலிக்காப்டர் மூலமும் தண்ணீர் கொட்டிப்பார்க்கிறார்கள் ஓன்றும் வெற்றிப்பெற்றதாக தெரியவில்லை, ஆகையால் ஒரு பெரிய விளைவை எதிர்பார்த்து உலகமே பயந்து போய் இருக்கிறது என்பதுதான் உண்மை.

இங்கே மனித முயற்சி தாண்டிய இரு விஷயம் நடைபெறவேண்டுமோ என்று தோன்றுகிறது.

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்