Mar 18, 2011

ஜப்பானில் இன்றைய நிலமை(18/3/2011)

இன்றுகாலை முதல், பாதிக்கப்பட்ட அணுமின்நிலையத்தில் எமர்ஜென்சி டீசல் மின் உற்பத்தி இயந்திரம் செயல்படத்தொடங்கிவிட்டது. அதனால் தண்ணீர் மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள் மெல்ல செயல்படத்தொடங்கும், ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வரத்தொடங்குவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் நிச்சயம் இந்த முன்னேற்றம் ஒரு நல்ல அறிகுறிதான்.

ஆனால் உலகத்தில் அதிக வயதானவர்கள் உள்ள தேசம் என்பதால், இந்த நிலைமையில் அவர்களை பாதுகாப்பது மிக சிரமாக இருக்கிறது. பலர் காலநிலை மோசம் மற்றும் நல்ல இருப்பிடம் இல்லததால் மரணமடைந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்