இன்று ஏற்ப்பட்டுள்ள போர் பதட்டம் மிக முக்கியமான ஒரு சூழலை இந்திய பாகிஸ்தான் இடையே ஏற்ப்படுத்தியுள்ளது, இரண்டு நாடுகளும் தத்தம் எல்லைகளில் தனது ராணுவத்தை குவித்துக்கொண்டிருக்கின்றன, இதையெல்லாம் அமெரிக்க அரசு மிகவும் பொறுமையோடு இருக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது, இது ஒன்றும் சாதாரண விஷ்யமில்லை, நமக்கென்று ஒரு குணம் இருக்கிறது,
முன்பு இலங்கை பிரச்சினையில் நாம் தலையிட்டு நமது ராணுவம் மோசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டு இந்திய மண்ணில் வந்து இறங்கியபோது அப்போது முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் எனது தமிழ் மக்களை கொன்று மானபங்கப்படுத்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று ஒதுங்கி கொண்டது நினைவிருக்கலாம், அதன் பின் இந்திய தேசமும் இலங்கை பிரச்சினையில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி கொண்டாலும் பின்னர் ராஜிவ் படுகொலை நடந்த பின் பெரும்பாலான இந்திய தமிழர்கள் அதோடு இலங்கையை மறந்தே போனார்கள், அதாவது அந்த பிரச்சினையால் நமக்கு வீண் தலைவலிதான் என்பதால் ஒதுங்கிகொள்வது என்று,
இப்படி ஒதுங்கிப்போன நிலை மாறி இப்போதுதான் பழய சூடு தொடங்கியுள்ளது, ஆனால் பாகிஸ்தான் நிலை வேறு எத்தனை முறை சூடுபட்டாலும் அவர்களால் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது. எத்தனை குண்டு வெடிப்புகள் தற்கொலைப்படை தாக்குதல்கள் என்று அந்தநாடு அல்லோகலப்பட்டாலும் அவர்கள் நம் நாட்டின் மீதான வெறுப்பை மாற்ற விரும்ப வில்லை.
இந்தியாவின் நிலை போரை தொடங்குவதில் ஆர்வமில்லை என்று கூறிக்கொண்டிருந்தாலும் இந்திய படைகள் எல்லைப்புறத்தை நோக்கி நகர்த்தப்படுவதாக செய்திகள் வருகின்றன தினசரிகளில், இதன் நோக்கம்தான் என்ன, ஒரு பயமுறுத்தல் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் போர் இப்போது வருமா வராதா என்பது ஒரு தொங்கி நிற்கும் கேள்வி,
என்னைப்பொருத்தவரை போர் வருவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருப்பதாக நினைக்கிறேன், உலகின் இரு அணு ஆயுத நாடுகள் நேரடியாக போர் செய்ததாக இதுவரை வரலாறு இல்லை, இந்திய பாகிஸ்தான் போர் வருமானால் அது அணு ஆயுதபோராக மாற வாய்ப்பில்லாமல் இல்லை, இதில் வெற்றி தோல்வி என்பது அடுத்த விஷயம் ஆனால் அதனால் இழக்கப்போகிற இழப்பு ஈடு செய்யக்கூடியதா என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.
இன்றைய பொருளாதார குழப்ப நிலையில் இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு தாக்கு பிடித்து வருகிறது, ஆனால் பாகிஸ்தான் பொருளாதாரம் கிட்டதட்ட மிக மோசமான நிலையில் எல்லா நாடுகளிடமும் கையேந்தி நிராகரிக்கப்பட்ட பின் இப்போது உலக வங்கி கொஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது அந்த பணம் வராமல் போனால் அந்த நாடு போர் இல்லாமலேயே உள்நாட்டு போரால் அழியக்கூடிய அபாயம் உள்ளது, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலைக்கு அரசு செல்லும் வாய்ப்பு இருப்பதாக பல்வேறு பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
இந்நிலையில் அந்த நாடும் போரை விரும்ப சாத்தியமே இல்லை, இப்போது அவர்கள் ஆப்கான் எல்லையில் இருந்து தனது துருப்புக்களை இந்திய எல்லைக்கு மாற்றி கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன அது அமெரிக்க நேட்டோ படைகளுக்கு மிக கெடுதலான விஷ்யமாகும், ஆப்கானிஸ்தானில் போரிட்டு கொண்டிருக்கும் நேட்டோ படைகளுக்கு உணவு ஆயுதம் எல்லாம் பாகிஸ்தான் வழியாகத்தான் சென்றாக வேண்டும் அந்த பகுதியில் நடைபெறும் தாலிபான் தாக்குதல்களால் அந்த சப்ளை வாகனங்கள் தொடர்ந்து தாக்கி அழிக்கப்படுகின்றன, அவைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் அப்பகுதியில் உள்ள தாலிபான் ஊடுருவல்களை தடுக்கவும் பாகிஸ்தான் படைகள் ஆப்கான் எல்லையில் அவசியம் அதனால் அமெரிக்க நேட்டோ நாடுகள் இந்த போர் நடந்தால் அது அவர்களின் பிரச்சினையாக பார்க்ககூடும்.
ஆனால் தாலிபான் தலைவர் முல்லா உமர் தனது சமிபத்திய செய்தி ஒன்றில் இந்திய போர் நடந்தால் அதில் தாலிபான்கள் பாகிஸ்தான் சார்பாக போர் புரிவார்கள் என்பது போல் கூறியுள்ளார், இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமில்லாத விஷ்யங்கள். ஒரு அரசு நாட்டின் வளர்சி மீது கவனம் செலுத்தாமல் வெறும் பக்கத்து நாட்டுடனான வெறுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை காலமாய் மாறி மாறி பிழைத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது பாகிஸ்தானின் அரசுதான், அங்குள்ள அறிவு ஜீவிகள் எழுத்தாளர்கள் மற்றும் சமாதான விரும்பிகள் எல்லாம் அந்த நாட்டு மக்களை வழிநடத்தமுடியாமல் இருப்பதுதான் மிக கொடுமையான விஷயம், ஒரு வெறுப்பு என்பது இப்படி மறையாமல் 60 ஆண்டுகளுக்கு மேலாக வளர்கப்பட்டு புரிந்து கொள்ளாமல் விடப்பட்டுள்ளதுதான் இந்த சமுதாயம் செய்த தவறு,
பாகிஸ்தானுக்குள்ளேயே வடமேற்கு மாகாணம் கிட்டதட்ட தன்னை தனி நாடாகத்தான் நடத்தி கொண்டிருக்கிறது, அதுபோல் பலுசிஸ்த்தானும் கிட்டதட்ட தனிநாடு போல்தான் தனி வரி வசூல் நிர்வாகம் எல்லாம், பாகிஸ்தான் என்பது சிந்து மற்றும் மத்திய மகாணங்கள்தான் அங்கு மட்டும்தான் போலிஸ் அரசு எல்லாம் செல்லுபடியாகும், மற்ற மகாணங்களில் எல்லாம் ராணுவம் சென்றால்தான் கொஞ்சம் பேச்சை கேட்பார்கள் அப்படி இருக்கிற நிலையில் அவர்களுடனான போர் முடியும் போது கிட்டதட்ட அந்த நாடு சிறு சிறு துண்டுகளாக சிதறிவிட வாய்ப்பிருக்கிறது.
இதெல்லாம் தெரியாமல் இல்லை அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, இனி ஒரு போரை நிச்சயம் பாகிஸ்தான் தாங்காது, அவர்கள் வேண்டுமானால் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்று சொல்லிக்கொள்ளலாம், போர் நடத்த முதலில் பணம் வேண்டும் எங்கே இருக்கிறது பணம், இந்தியா தனது மிகப்பெரிய மக்கள் தொகையால் அதனை சரி செய்து கொள்ளும் ஆனால் பாகிஸ்தான்?
இப்போதைய இந்திய தேவை பாகிஸ்தானை நிர்பந்த படுத்துவதுதான், அதைதான் நமது நாடு செய்து கொண்டிருக்கிறது கூடவே இப்போது IMF டம் இருந்து பணம் பெற அதற்கு அமெரிக்காவின் சிபாரிசு தேவை ஆகையால் அவர்கள் சொல்வதை அது கேட்கும் எனவே நமது நாடு தொடர்ந்து அமெரிக்கா மூலமாக அழுத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்,
ஒரு அமைதி இழந்த அல்லது பொருமை இழந்த நிலையில் ஏதேனும் ஒரு பொறி எங்காவது தூண்டப்பட்டால் அது ஒரு மோசமான அழிவிற்கான போரை தொடங்கி வைத்த நிகழ்வாக மாறிவிடும் அது எந்த மாதிரியான நிகழ்வோடு முடியும் என்று சொல்வதற்கில்லை.
செல்வம்
Dec 29, 2008
இந்திய - பாக் போர் வாய்ப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
very good thinking
ReplyDeleteசரியான ஆய்வு. நல்ல கட்டுரை.
ReplyDeleteபாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைப்புறத்தை நோக்கி நகர்த்தப்படுவது, அமெரிக்காவிடம் இருந்து மேலும் பணம் வாங்கும் நோக்கிலும் இருக்கலாம்.
நன்றி திரு நாடோடி அவர்களே
ReplyDeletenice inormation......normal news with more deeper thinkingis different aspect is really good to read.......
ReplyDeletenice deeper aspect thinking and really good to read and gather more information about day to day........
ReplyDeleteஇந்த பங்குச்சந்தை பற்றி சிறிது விளக்கமாக கூறுங்களேன். இதனை பற்றி பாமரனும் புரியும் வண்ணம்.
ReplyDelete