Dec 6, 2008
உளறல்-11 மும்பை சம்பவம்
மும்பையில் நடந்த சம்பவங்களைப்பற்றி நிறைய கட்டுரைகள் ஆராட்சிகள் என வந்து கொண்டே இருக்கின்றன சோ போன்றவர்கள் தீவிரவாதிகளின் இலக்குகளை தாக்க வேண்டும் என்பது போன்றும் பல விதமான கருத்துக்கள் எல்லா திசையிலும் இருந்தும் வந்து கொண்டே இருக்கின்றன, அதிலும் பொடா போன்ற சில சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பதும், மிக கடுமையான சட்டங்களை இயற்ற வில்லை கூடவே அரசியல்வாதிகள் தங்களின் ஓட்டு அரசியலால் ஒரு பாதுக்காப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தி விட்டார்கள் என்பதும், இன்னும் சில வலைபூக்கள் தீவிரவாதிகள் இந்துக்களின் காவிநிற கயிறு கட்டியிருந்தார்கள் எனவும் புதிய திசையில் சில வாதங்களை வைக்கிறார்கள், கீழே உள்ள தொடர்பில் காணலாம்,
http://kalaiy.blogspot.com/2008/12/blog-post_04.html
இவைகள் எல்லாம் அடிப்படையில்லாத வாதங்கள் என்பது புரியும், ஆனால் நடந்தது ஒரு மோசமான சம்பவம், அதனை முன்கூட்டியே நமது உளவுத்துறை கணிக்க தவறிவிட்டது, நமது நாட்டு அமைப்பில் இது மிகசிக்கலான விஷயம், எந்த கட்சியும் யார் மீது வேண்டுமானாலும் குறை சொல்லலாம், ஆனால் அவரவர் ஆட்சிகாலத்தில் அவர்கள் அப்படித்தான் நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குரியது,
உளவுத்துறை தனது இரு பிரிவுகளையும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே பெரிதும் பயன் படுத்துவதால் இது போன்ற சம்பவங்களை அவர்கள் முன்னறிவிக்க முடியாமல் போகிறது, சரியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் நிர்வாகம் அரசியல் சாராமல் நாட்டின் பாதுகாப்பு மட்டும் நோக்கமாக கொண்டு அதனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும், அது அரசியல் கண்காணிப்புகளால் தனது நேரத்தை வீணடிப்பதற்கு வாய்ப்பில்லாமல், தனது பணியை செய்ய அனுமதிக்கவேண்டும்,
பாகிஸ்தான் மீது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும், அது பி.ஜே.பி ஆட்சியின் போதும் தெரியும், அப்போது நடந்த கார்கில் போரில் எல்லைக்கோட்டை தாண்டாமல்தான் குண்டு வீச நம்மால் முடிந்தது, போர் நடக்கிறது, ஆளூம் அரசு பி.ஜே.பி ஆனால் எல்லைக்கோட்டை கடந்து நமது விமானங்கள் பறக்கவோ குண்டு வீசவோ முடியவில்லை, ஆனால் அந்த புரத்தில் இருந்து நமது tiger hill வரை அவர்களது ஆட்கள் ஊடுரூவி இருந்தார்கள்,
ஆகையால் எல்லா அரசுக்கும் எல்லா வகையிலும் இப்படி சில நெருக்கடிகள் இருக்கின்றன, உணர்சிவசப்பட்ட பேச்சுக்கள் எல்லா நிலையிலும் இருக்கின்றன, அதுவா இப்போதைய தேவை, இறந்து போன நமது வீரர்களுக்கு மரியாதைகள் செய்வதும் அதனை பெரிய சாதனைகளாக பேசி ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று பார்பதும் இப்போது அரசியல்வாதிகளின் நாடகங்கள் ஆகிவிட்டன.
எல்லா சம்பவங்களுக்கும் ஒரு எதிர் மறையான காரணத்தை கண்டு பிடிக்கிற சில அதி பயங்கர மதசார்பற்ற வாதிகளையும் கண்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இப்போதைய நடவடிக்கையாக திரு ப.சிதம்பரம் தனது அமைச்சகத்தில் நல்ல மாற்றங்களை உண்டு பண்ணுவார் என எதிர்பார்க்கலாம்,
மேலும் ஓட்டு அரசியல் வேறு இந்த பிரச்சினையில் முக்கிய பங்கு வகிக்கிறது, முஸ்லீம்களின் ஓட்டு போய்விடுமோ என்கிற பயம் காரணமாக அரசியல் கட்சிகள் மிகவும் மிதமான போக்கை தீவிரவாதிகளிடம் கடைபிடிப்பது மிகவும் அருவருக்கதக்கது,
பாகிஸ்தானோடு எல்லா உறவுகளையும் மீண்டும் மீண்டும் புதிப்பிக்கவேண்டிய அவசியம் என்ன, வாஜ்பாயி பஸ் விட்டார், மன்மோகன்சிங் ரயில் விட்டார் இப்படி கொஞ்சி குலாவ இரு கட்சிகளுமே முயன்று விட்டு, மற்றவரை குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது, ஒரு சரியான உத்திரவாதம் வரும்வரை எல்லா உறவுகளையும் நிறுத்துங்கள், சார்க் போன்ற கூட்டணிகளில் இருந்து விலக்குங்கள் அல்லது விலகுங்கள், எந்த முக்கியத்துவம் இல்லாத கடுமையான அரசியல் நெருக்கடிகளை உண்டாக்குங்கள்,
அதேநேரம் எல்லா வகையிலும் நமது நாட்டின் உளவுப்பிரிவை மிக பரவலான முறையில் கடுமையாக்குங்கள், எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாத ஒரு தினசரி ஆலோசனைகளின் மூலம் புதிய திட்டங்களை வகுக்கவேண்டும்,
அவைகள் நடக்கும் என்று எதிர்பார்போம், புதிய அமைச்சர் அதனை செய்வதாக கூறியுள்ளார் உளவு பிரிவுகளின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது ஒருவகையில் அதன்மீதான அணுகுமுறை அதிக முனைப்போடு இருக்கும் என்பதை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.
இனியாவது நமது அப்பாவி மக்களின் உயிர்கள் மதிக்கப்படவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பதிவு!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
நல்ல பதிவு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி நண்பரே, தங்களின் வலைப்பகுதிக்கு சென்று கண்டேன் மிக அற்புதமான பணியை செய்து கொண்டிருக்கின்றீர்கள், எனது வாழ்த்துக்கள், எல்லா புறமும் அமைதி நிலவவேண்டுன் என்பதே என் பிரார்த்தனை
ReplyDelete