Dec 28, 2008

புத்தக விழா

நீண்ட நாளாக எழுதாமல் இருந்துவிட்ட ஒரு இடைவெளி தோன்றுகிறது, கிழக்கு பதிப்பகம் தற்போது புத்தக கண்காட்சி வருகின்ற சூழலில் நிறைய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது, அதன் விழா ஒலிபதிவுகள் பத்ரியின் “எண்ணங்கள்” வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருக்கின்றன, எனது வலைப்பூவில் உள்ள தொடர்பின் மூலம் அதனை down load செய்து கொள்ளலாம்.

இலக்கியம் என்பது மிக மன நிம்மதி தரக்கூடிய விஷ்யம் என்பதும், இது போன்ற பேச்சுக்கள் மிகவும் உற்சாகம் தரக்கூடியதாகவும் இருக்கும். கிழக்கு பதிப்பகம் என்பது பா.ராகவன், பத்ரி மற்றும் பலர் நிறைந்த ஒரு எழுத்தாளர் குழுமம், பா.ராகவனின் எழுத்து நடை மிக உற்சாகமானது, டாலர் தேசம், 9/11, நிலமெல்லாம் ரத்தம் போன்ற மிக அற்புதமான புத்தகங்களை எழுதியவர், இப்போது குமுதம் ரிப்போர்டரில் “யுத்தம் சரணம்” என்று இலங்கையின் சம்பவங்களை எழுதி வருகிறார். சாருவும் தனது புத்தகங்களை இந்த புத்தக காட்சியில் வெளியிடுகிறார், உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் சொல்லுங்கள் புத்தகங்களை சென்று பார்த்து வாங்கி படிக்க.

ஒரு மிக அற்புதமான அனுபவம் இந்த புத்தகங்களை சென்று பார்ப்பது, எவ்வளவு துறைகளில் எவ்வளவு மனிதர்கள் தங்கள் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதும் அவைகள் நமக்கு எப்படியெல்லாம் உதவும் என்பதும் புரியும். நான் இந்தியாவில் இருக்கும் காலங்களில் புத்தக கண்காட்சிகளை விரும்பி சென்று பார்த்து பல புத்தகங்களை வாங்குவது வழக்கம். ஆகையால் எல்லோருக்கும் சொல்லுங்கள், வெறும் சமையல் புத்தகங்களையும் யோகா போன்ற உடற்பயிற்சி புத்தகங்களை மட்டுமே வாங்காமல் நல்ல இலக்க்கிய புத்தகங்களையும் வாங்குங்கள். எனது வலைப்பூவில் தமிழின் தலைசிறந்த 100 புத்தகங்கள் முந்தைய பதிவில் உள்ளது அதனை கூட முயன்று பாருங்கள்.

செல்வம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்