அது பிரமாண்டம்
அதன் மொழி புரியவில்லை
மெல்ல மெல்ல சுற்றி இருப்பவர்களை சுவிகரிக்கிறது
கடந்து போகும் எல்லாரையும் சுண்டி இழுக்கிறது
பார்த்துக்கொண்டே இருந்தால் பரவாயில்லை போலிருக்கிறது
தனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வளர்ச்சி தெரிகிறது
யாரையும் நம்புகிறது
நம்பிய யாரும் ஏமாற்ற முடியவில்லை
என்ன நினைக்கிறது என்பது அறியவேமுடியவில்லை
ஆழமாய் பார்க்கிறது அதன் அர்த்தம் புரிய புத்தி போதவில்லை
உலகின் அத்தனை அசைவையும் ஒரு விழிப்பில் உணர்த்திவிடுகிறது
மெல்ல உதடு குவித்து ஒரு சொல் சொல்ல வரும்போது
கொடுப்பதற்கு ஈரேழு உலகும் போதாது போல் தோன்றுகிறது
ஏதேதோ தகவல்கள் அந்த அற்புத நொடிகளில்
ஆனால்
என் மறமண்டை அத்தனை அறிவாயில்லை
தெரியாத மொழி பேசும் மனிதனிடம்
அறியாமல் தலையாட்டும் ஐந்தறிவு ஜீவனாய்
நான்.
என்ன செய்ய
என் மூன்று மாத குழந்தை
என்னை இப்படித்தான் எழுதவைக்கிறது.
-Dhavaneri
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்