Sep 30, 2008

அது பிரமாண்டம்

அது பிரமாண்டம்

அதன் மொழி புரியவில்லை

மெல்ல மெல்ல சுற்றி இருப்பவர்களை சுவிகரிக்கிறது

கடந்து போகும் எல்லாரையும் சுண்டி இழுக்கிறது

பார்த்துக்கொண்டே இருந்தால் பரவாயில்லை போலிருக்கிறது

தனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வளர்ச்சி தெரிகிறது

யாரையும் நம்புகிறது

நம்பிய யாரும் ஏமாற்ற முடியவில்லை

என்ன நினைக்கிறது என்பது அறியவேமுடியவில்லை

ஆழமாய் பார்க்கிறது அதன் அர்த்தம் புரிய புத்தி போதவில்லை

உலகின் அத்தனை அசைவையும் ஒரு விழிப்பில் உணர்த்திவிடுகிறது

மெல்ல உதடு குவித்து ஒரு சொல் சொல்ல வரும்போது

கொடுப்பதற்கு ஈரேழு உலகும் போதாது போல் தோன்றுகிறது

ஏதேதோ தகவல்கள் அந்த அற்புத நொடிகளில்

ஆனால்

என் மறமண்டை அத்தனை அறிவாயில்லை

தெரியாத மொழி பேசும் மனிதனிடம்

அறியாமல் தலையாட்டும் ஐந்தறிவு ஜீவனாய்

நான்.

என்ன செய்ய

என் மூன்று மாத குழந்தை

என்னை இப்படித்தான் எழுதவைக்கிறது.
-Dhavaneri

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்