Sep 19, 2008

ஸ்ரீ சிங்காரம் சுவாமிகள் வரலாறு


பூரணம் ஆன நாள்: 12 நவம்பர் 2007 திங்கள் கிழமை கேட்டை நட்சத்திரம் காலை 10:45 மணி மதுரையில்

அடக்கம் செய்யப்பட்ட நாள்:13 நவம்பர் 2007 செவ்வாய் கிழமை மாலை 3:00 மணி. நடுவச்சேரியில்.


நடுவச்சேரியில் சமாதி கட்டட பணிகள் தொடங்கிய விபரங்கள்

வாஸ்து நாள் :ஏப்ரல் 22 , 2008 சித்திரை 10 சர்வதாரி வருஷம்.

17x17 அடிகள் உள்கூடு கொண்ட கட்டடம்

சமாதி திறந்த நிலையில் தொட்டி வடிவில் 6.5x3 அடி அளவில் சமாதி தொட்டி

சமாதி மேல் மண்டபம் 6x6x4.2 அடி பிரமிடு போன்ற அமைப்பு

முன்புறம் முக்கோண வடிவ வாசல் 5x4 அடியில்

நிலமட்டத்தில் இருந்து 3 அடி உயரம் தளம் உயர்த்தப்பட்டுள்ளது, 6 படிகள் உள்ளது

உடல் தளத்தில் இருந்து ஒன்பது அடி ஆழத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

விபூதி செங்கல் தூள் சந்தனம் உப்பு குங்குமம் இட்டு துணி பையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஞானம் தேடுவோர்க்கு ஞானகுருவாகவும்

ஆரோக்கியம் வேண்டுவோர்க்கு அருள்புரிபவராகவும்

அமைதி நாடுவோர்க்கு ஆறுதல் நல்பவராகவும்

இருக்கிறார்கள்

R.S.முத்துவேல் பிள்ளை குஞ்சம்மாள் தம்பதியினரின் இரண்டாவது ஆண்மகவாக 1940 செப்டம்பர் 12ம் நாள் விக்கரம வருஷம் ஆவணிமாதம் 28 ம் தேதி காலை 7:15 க்கு உத்திராட நட்சத்திரத்தில் விசலூரில் பிறந்தார்கள்.

தனது இளம் வயதில் துறவறம் பூணும் நோக்கதுடனே வாழ்வியல் முறையில் ஈடுபட்டு ஞானம் வேட்கை கொண்டு பல்வேறு பயணத்தில் அரசு கால்நடை உதவி ஆய்வாளராக விளாத்திகுளம் மேலக்கரந்தை கோவில்பட்டி போன்ற ஊர்களில் பணியில் இருந்து வாயில்லா ஜீவன்களுக்கு மிகுந்த அன்போடு மருத்துவம் செய்து ஜீவ சேவையின் தொடக்கம் ஆரம்பமானது.

பிற்பாடு தனது கடும் தேடுதலால் 15-1-1966 ல் காரைக்குடியில் ஸ்ரீ மஹ்தூம் பாவா பகுரூதீன் அவர்களுடைய மெய்பொருள் தீட்சையும் குருநாதரின் அறிவுறுத்தல் படி துறவற நிலை நீக்கி திருமணத்திற்கு சம்மதமும் கொள்கிறார்.

25-8-1967ல் சந்திரா அம்மையாருடன் திருமணம் ஆகி மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்து தனது குருநாதருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின்படி தனக்கு பின்னும் தனது ஞான நெறி தழைக்க செய்தார்.

மகிழஞ்சேரி, திருமருகல்,வைப்பூர்,காசாங்காடு,மதுக்கூர்,களத்தூர்,அகரமாங்குடி ஆகிய ஊர்களில் தனது கால்நடை மருத்துவப்பணியும் இடையில் ஸ்ரீ.சுந்தரமூர்த்தி சுவாமிகள் மூலம் பெற்ற நாட்டு வைத்தியமும் கொண்டு கிட்டத்தட்ட 45 வருடங்கள் மேன்மையான மருத்துவ சேவையாலும் பொது சேவையாலும் எண்ணற்ற மனிதர்களின் அன்பை உரிமையாக்கி கொண்டிருந்தார்.

தனது குருநாதரின் ஆதிவிளக்க நிலையம் ( காரைக்குடி) மற்றும் தவநெறிக்கோட்டம் என்கிற தனது குருநாதரின் சமாதி நிலையத்தையும் (ராஜகம்பீரம்-மானாமதுரை) கட்டி
அதன் நிர்வாகத்திலும் அதன் அடுத்த குருநிலையிலும் இருந்து கிட்டத்தட்ட 30 வருட காலம் ஆழ்ந்த ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார்கள், மத வேறுபாடுகள் இல்லாத அன்பும் ஆன்மீகமும் கொண்ட மனிதராக ஒரு இஸ்லாமிய ஞானியின் வழியில் ஒரு இஸ்லாமிய ஊரே இவர்களின் வழிகாட்டுதலை ஏற்று மிகுந்த அன்புடன் ஈடுபட்டிருந்த ஆச்சர்யம் வேறு எங்கும் நிகழாத அற்புதம்

இவர்களது வாழ்வில் கண்ட எளிமையும் அன்பும் ஆதரவான வார்த்தைகளும்,பிரார்த்தனைகளும்,ஆசிர்வாதங்களும் எத்தனையோ ஜீவன்களின் துயர் துடைத்திருக்கின்றன.

பல்வேறு சம்பவங்களில் பல அரிய ஞானிகளால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்கள்.ஸ்ரீ.சிவராமகிருஷ்ண சுவாமிகள் மாதிரிமங்கலம், ஸ்ரீ மொட்டையன் சுவாமிகள் திருவண்ணாமலை,ஸ்ரீ.சுருளிசுவாமிகள் மாரியம்மன்கோவில்,ஸ்ரீ.காத்தையா சுவாமிகள் வாழமரக்கோட்டை போன்றோர்களுடனான சந்திப்புகளில் பல அரிய நிகழ்வுகள் ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளன.

தன் வாழ்நாளில் மகான்களின் குருபூஜைகளை மிகவும் ஈடுபாட்டோடு செய்து வந்தார்கள், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், நன்னிலம் ஸ்ரீ தாண்டேஸ்வர சுவாமிகள்,மாதிரிமங்கலம் ஸ்ரீ ரோட்டு சுவாமிகள்,ராஜகம்பீரம் ஸ்ரீ மஹ்தூம் பாவா ஆகியோரது குருபூஜைகள் ஆன்மீக தொண்டர்களின் உதவியோடு செய்து வந்தார்கள்










No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்