Jul 3, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-3

நேரமோ ஆகிக்கொண்டிருந்தது, கு.சே அப்படியும் இப்படியும் அலைந்து கொண்டிருந்தான், அவன் முகத்தில் ஒரு பீதி குடியேறி இருந்தது, மெல்ல அந்த நிலையில் அவன் ஒரு பைத்தியக்காரனைப்போல் ஆகிவிடக்கூடிய நிலைதான் இருந்தது, அவனின் பதற்றம் கண்டு அங்கு பணிபுரிந்த பணியாட்களில் ஒருவர் தமிழர், இவனைக்கண்டு, என்ன சார் பிரச்சினை என்று கேட்டார், கு.சே அவரிடம் அழுதுவிடுவான் போல இருந்தது, எனது பெட்டி வரவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை என்று சொல்லும்போதே அவன் நா தழுதழுத்தது, அவர் பயப்படாதீங்க எங்கையும் போய்விடாது அந்த கவுண்டரில் சென்று சொல்லுங்கள் என ஒரு இடத்தை காண்பித்தான், குணசேகரன் அந்த இடத்தில் சென்று டை கட்டி கொண்டு இருந்த ஒரு ஆளிடம் தனக்கு முடிந்த ஆங்கிலத்தில் தனது பெட்டி வரவில்லை என்பதை கூறினான், அந்த மனிதன் இவனுடைய டிக்கட்டை கேட்டான், குலசேகரன் தன்னிடம் இருந்த டிக்கட்டின் மறுபாதியை அவரிடம் நீட்டினான்.

அதன் பின்பக்கத்தில் ஒரு சிறிய சீட்டு ஓட்டி இருந்தது, அதை அப்போதுதான் கு.சே கவனித்தான்,தனது லக்கேஜ் பற்றிய ரசீது அதுதான் போலும் என்று அப்போதுதான் அவனுக்கு புரிந்தது. உடனடியாக அந்த சீட்டில் இருந்த நம்பரை தனது கணினியில் தட்டிப்பார்த்து உங்கள் பெட்டி வந்து விட்டது அங்குதான் இருக்கும் என்று கூறி ஒரு பணியாளரையும் துணைக்கு அனுப்பிவைத்தார், மீண்டும் இருவரும் கன்வேயர் பெல்ட் இருக்கும் இடத்தில் கீழே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை பார்த்தார்கள்,

அந்த உடன் வந்த பணியால் அங்கு வெள்ளை நிற பிளாஸ்டிக் பை ஓன்று மூட்டை போல் கட்டி இருந்ததை பிரித்து கு.சே வை பார்க்க சொன்னார், அது நல்ல அழுத்தமான பையாக இருந்தது அதனை பிரித்த போது அவன் பெட்டி திறந்து அதில் உள்ள இவன் உள்ளாடை உள்ளிட்ட சாதனங்கள் அதனுள் விரவிக்கிடந்தன கு.சே வுக்கு சற்று தர்மசங்கடமாக உணர்ந்தான், அந்த உதவியாளரை ஏன் இப்படி ஆனது என்று கேட்டான், அதற்கு அவர் உங்கள் பெட்டி பூட்டு சில நேரம் சரியில்லாத போது திறந்து கொள்ளும் அதை இப்படி கட்டி அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான் என்று கூறிவிட்டு அந்த பணியாளர் அவர் பணி முடிந்த அர்த்தத்தில் அங்கிருந்து சென்று விட்டார்,

கு.சே அவைகளை மீண்டும் பெட்டிக்குள் வைக்கும் போது தனது சான்ற்தழ்கள் அதில் இருக்கின்றனவா என்று சரிபார்த்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டான், அதன் பின் அவைகளை ஒழுங்கு படுத்தி எடுத்து தனது வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்,

இந்த அலமலப்பில் கிட்டதட்ட ஒரு மணிநேரம் கால தாமதமாகிவிட்டது, வெளியே வந்தால் வெளியில் கடுமையான கூட்டம் விதவிதமான முகங்களில் எல்லோரும் யாரையோ தனக்கு வேண்டியவர்களை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள், அதில் பலவாறான மனிதர்கள் சிலர் தத்தமது கைகளில் சிலரின் பெயர் அல்லது கம்பெனி பெயர்களை எழுதி வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்,

அதில் தனது பெயரோ அல்லது கம்பெனி பெயரோ இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே கு.சே தனது தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தான், அவன் பார்த்த வரைக்கும் எங்குமே அப்படி ஏதும் காணப்படவில்லை, என்ன ஆயிற்று யார் வந்து தன்னை அழைத்துப்போவார்கள், அவர்கள் நம்மை சரியாக அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்றெல்லவா சொன்னார்கள், யாரும் இல்லை என்றால் என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை மெல்ல அங்கே வண்டியை வைத்துக்கொண்டு நின்று கொண்டான், ஒன்றுமே தெரியாமல் சென்று கொண்டே இருந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை, அப்படியாரும் அழைக்க வராமல் போனால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளச்சொல்லி ஒரு தொலைபேசி எண் கொடுத்திருந்தார்கள், அதை தேடி தன் கைத்தொலைப்பேசியை ஆன் செய்தான்,

தவநெறிச்செல்வன்

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்