Jun 25, 2009

குலசேகரனும் வெளிநாட்டு பயணங்களும்-1

குலசேகரன் குவைத் விமான தளத்தில் இறங்கும் போது, அது அவனுக்கு முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் ஒரு பதற்றமான உணர்வையே கொண்டிருந்தான், அதுவும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் எல்லோரையும் போலவே அவனுக்கும் பணம்தான் காரணமாய் இருந்தது.

விமான நிலையத்தை விமானம் எட்டியவுடன், பயணிகள் எல்லோரும் தத்தம் கைபேசியை ஆன் செய்வார்கள் போல, அதில் இருந்து ஒரே பீப் சத்தங்கள் வருகின்றன, சிலர் “நான் இப்பதான் இறங்கினேன், இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவேன்”, என்று அவரவர்களை அழைக்க வந்திருப்பவர்களுடன் உரையாடத்தொடங்கினார்கள்,

குலசேகரனுக்கோ இதெல்லாம் செய்ய முடியாது அவனிடம் உள்ள ஏர்டெல் குவைத்தில் எங்கே பேச உதவப்போகிறது? அவனை அழைக்க யாராவது வந்திருப்பார்களா அல்லது, பத்திரிக்கைகளில் சொல்வதுபோல் ஏர்போர்ட்டில் காத்திருந்து அவஸ்த்தை படநேருமோ என்றெல்லாம் ஒரு குழப்பமான மனநிலையிலேயே அவன் இறங்கினான்,

ஆரம்பத்தில் விமான பயணம் அவனை அப்படி ஒரு பயத்தில் ஆழ்த்தி இருந்தது வேறு விஷயம், அதனைப்பற்றி அடுத்த அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

ஒரு வழியாக இறங்கி எல்லா பயணிகள் செல்லும் திசையில் அவனும் அவர்களோடு சென்று கொண்டிருந்தான் இரண்டு புறமும் அலங்கரிக்கப்பட்ட கடைகள் விதவிதமான உலகத்தை அவனுக்க காட்டிக்கொண்டிருந்தன, அங்கங்கே அரபியிலும், ஆங்கிலத்திலும் விவரங்கள் எழுதப்பட்டிருந்தன, பெரும்பாலும் அரபியில்தான், இந்த அரபி எழுத்தை கண்டாலே குலசேகரனுக்கு ஒரு பயம் உள்ளுக்குள் எழுந்திருந்தது, அது எந்த வகையுடனும் சம்பந்தபடாத ஒரு அமைப்பில் இருந்ததாக அவனுக்கு தோன்றி இருக்கலாம், அல்லது இந்த காஷ்மீர் தீவிரவாதிகளின் அறிவிப்புகளை கண்டு அப்படி ஒரு உணர்வு தோன்றி இருக்கலாம்,

(ஆனால் அது உருது, இது அரபி, பலருக்கு அரபியும் உருது ஒன்று என்று தோன்றலாம் அரபியும் உருதும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத உச்சரிப்புகளையும் சொற்களையும் கொண்டவை)

பின்னர் பயணிகள் எல்லோரும் தத்தம் கை லக்கேஜுடன் ஒரு நீண்ட வரிசையில் நின்று கொண்டார்கள் அவர்களுடன் சென்று குலசேகரனும் நின்று கொண்டான், எல்லோர் கையிலும் பாஸ்போர்ட் இருந்தது, சரி இங்கு பாஸ்போர்ட் காண்பிக்க வேண்டும் என்று நினைத்து அதனை எடுத்து கையில் வைத்துக்கொண்டான். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மெல்ல இவன் முறை வந்த போது வேகமாக போய் அந்த கவுண்டரில் இருந்த அரபி உடை அணிந்த அந்த ஆளிடம் தனது பாஸ்போர்ட்டை கொடுத்தான், அவன் அதை வாங்கி பார்த்து விட்டு திருப்பி இவனிடமே கொடுத்து ஏதோ ஒரு திசையை காண்பித்தான், அப்போதுதான் குலசேகரனுக்கு உரைத்தது ஏதோ அசம்பாவிதம் என்று, என்ன செய்வதென்று புரியாமல் அங்கேயே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு விழித்து கொண்டிருந்தான், ஒரு திருவிழாவில் காணாமல் போன குழந்தைதான் அப்போது கு.சே வுக்கு நியாபகம் வந்தது.

(இனி நாம் குலசேகரனை கு.சே என்றே அழைப்போம்.)

தவநெறிச்செல்வன்

2 comments:

  1. அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. ஓட்டும் போட்டாச்சு..

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்