Sep 13, 2012

காப்பி அடிக்கும் கலைஞன்

நான் கலைஞான முடிவதேயில்லை


எப்படி எழுதினாலும் சுவையாயில்லை

எப்படி இசைத்தாலும் சுகமாயில்லை

எப்படி நடித்தாலும் இதமாயில்லை

ஆனாலும்

நான் முயற்சித்துகொண்டே இருக்கிறேன்

உனக்காக ஒரு காதல் கடிதமும்

உன் சிரிப்புக்காக ஒரு சிம்பொனியும்

உன் கண்களுக்காக ஒரு கலைப்படமும்

ஆனால்

எடுத்து முடித்த பின்

எனக்குப்புரிந்தது

கலைஞர்கள்

உருவாவதில்லை

பிறக்கிறார்கள்  என்று.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்