Sep 10, 2009

கைகழுவுதல்:

கை கழுவுதல் நமது கிராமங்களில் மிக முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வந்தது, அதன் காரணம் கடும் உழைப்பை வயல்களில் முடித்துவிட்டு வீடு வந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்ததால் அப்படி ஒரு பழக்கம் வந்திருக்கலாம், கையை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியத்தி வலியுறுத்தி இப்படி ஒரு பழககம்.
இதுவே பின்னர் சொல்வழக்காகவும் சிலரை கைகழுவுவது என்று மாறிப்போனது,

நம் வீடுகளில் ஐயர்கள் திவசம் என்று சொல்லப்படும் பிதுர்களுக்கான கடன் ஆற்றும் போது இடை இடையே தண்ணீரை சிறிது விட்டு சும்மா ஒரு சம்பிரதாய கழுவல் செய்வதைப்பார்க்கலாம், ஐயருடைய பஞ்சபாத்திரம் என்கிற பாத்திரத்தில் கொஞ்சம் தர்ப்பை புல்லைப்போட்டு அதனைக்கொண்டு இப்படி செய்வது வழக்கம், மற்றும் கோவில்களில் ஹோமங்கள் சில சடங்குகளிலும் இந்த கைகழுவுவது போன்ற ஒரு பாவனையை காணலாம்,
பிற்பாடு இதே கைகழுவுதல் என்கிற பதம் பல மாற்றங்களை அடைந்துவிட்டது,

முன்பெல்லாம் சாப்பிடும்போது தும்மினால் போய் கையை கழுவி வா என்று சொல்வார்கள், தும்முவதற்கும் கைகழுவுவதற்குமான சம்பந்தம் என்னவாக இருக்கும், தும்மும் போது கையைக்கொண்டு துடைத்துவிட நேரும் என்பதால் இப்படி கூறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இயேசு கிருஸ்து சிலுவையை சுமந்து அதில் அறையப்படுவதற்காக கொண்டு செல்லும் போது, அங்கே மேலும் மூன்று திருடர்கள் சிலுவையில் அறையப்படுவதற்காக காத்திருக்கிறார்கள், அப்போது பிலாது மன்னன், இந்த நான்கு பேரில் ஒருவரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது, இந்த யாரை விடுதலை செய்யலாம் யேசுவை செய்யலாம் என்பது போல் கூடி இருந்த மக்களிடம் கேட்கிறான், அதற்கு அப்போது மிகுந்த வெறியில் இருந்த மக்கள் கூட்டம், பராபஸ் என்கிற கொடுமையான திருடனை விடுதலை செய்ய சொல்லிவிட்டு யேசுவை சிலுவையில் அறைவதை உறுதி செய்கிறது, அப்போது பிலாது தனது கையை கழுவி இந்த நீதிமானின் ரத்ததில் எனக்கு பங்கில்லை என்று கூறிவிட்டு சென்று விடுகிறான், இங்கேயும் அந்த கைழுவுதல் ஒரு குறீயீடாக வருகிறது.

அதன் பின் பிலாது மன்னன் கைகழுவியது ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த பாவத்தில் இருந்து தப்பினானா என்று தெரியவில்லை, ஆனால் கை கழுவுவது என்பது ஒரு மனதிருப்தி சம்பந்தப்பட்ட நிகழ்வாக பல இடங்களில் வருவதைதான் பார்க்க முடிகிறது.
சாப்பாட்டுக்கு முன் கைகழுவுவதில் பல முறை உண்டு வெகு நேரம் தண்ணீர் விட்டு கைகழுவுதல், அல்லது சோப்பு போட்டு கைகழுவுதல், அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகளின் உதவியுடம் கைகழுவுதல், சும்மா ஒருகையை தண்ணீர் குழாயில் காட்டி கைகழுவுதல், இரண்டுகைகளையும் தேய்த்து கைகழுவுதல், முழுகையும் நனையாமல் விரலை மட்டும் காட்டி பேருக்கு கழுவுதல் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், இந்த எல்லா கழுவுதலின் பின்னால் உள்ளது ஒரு நம்பிக்கை சுத்தமாகிவிட்டது அதனால் சாப்பிடும்போது கெடுதலான விஷயங்கள் எதுவும் வாய்க்குள் செல்லாது.

அதே போல் பாவங்களை கைகழுவும் பாவனையும் கூட அப்படித்தான், பிலாது மன்னன் நம்பியதைப்போல பாபங்கள் தம்மை அடையாது என்று ஒரு நம்பிக்கை, உறவுகளை கைகழுவும் சில சம்பவங்களும் இதில் இருக்கின்றன, எத்தனை உறவுகளை நமது தேவைகள் முடிந்த உடன் கைகழுவும் மனநிலை வருகிறது, எப்படி தாயையோ தங்கையையோ சகோதரனையோ அல்லது ஏதாவது ஒரு உறவையோ தனது தேவைகள் முடிந்த உடன் சுமையாக கருதும் போது கைகழுவ ஒரு முயற்சி செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு நியாயமான காரணம் எல்லாருக்கும் இருக்கும், காரணங்கள் கிடைப்பது மிகவும் எளிது, தேடும் போது உடனே வந்து நிற்பது காரணங்கள்தான். அந்த காரணங்களின் தன்மை பற்றி வேண்டுமானால் மாற்று கருத்து இருக்கலாம், ஆனால் காரணங்கள் எப்போதும் மரிப்பதே இல்லை.

கைகழுவுதல் தனது செயலுக்காக பல காரணங்களையும் அதனில் ஒரு திருப்தியையும் கொண்டு விடுவதால் அந்த சடங்கு எல்லா காலத்தும் அழியாமல் இருக்கின்றன, இன்றைய உணவு பழக்கம் கூட கைகளில் சாப்பிடுவதை விட தேக்கரண்டிகளில் சாப்பிடும் நிலைக்கு மாறிவிட்டாலும் உணவு மேஜைக்கு போகும் முன் கையை அணிச்சை செயலாக கழுவும் பலரைப்பார்திருக்கிறேன்,

எல்லா செயலிலும் கை முதன்மையான ஒரு உறுப்பாக இருப்பதால், அதை சுத்தமாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதுதானே, ஆனாலும் இந்த கைசுத்தம் என்கிற பதம் வேறு பொருளை தருவது இன்னும் சுவாரஸ்யமானது. அதைப்பற்றி அப்புறம் பார்க்கலாம்.

தவநெறிச்செல்வன்

3 comments:

  1. இதற்கெல்லாம் ஒரு நியாயமான காரணம் எல்லாருக்கும் இருக்கும், காரணங்கள் கிடைப்பது மிகவும் எளிது, தேடும் போது உடனே வந்து நிற்பது காரணங்கள்தான்./////

    100% உண்மை

    ReplyDelete
  2. உலவு.காம்: தங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்