Sep 2, 2009

சொக்கனும் சோமேஸ்வரனும்

சொக்கன் வழக்கம் போல காதர்பாயின் டீ கடையில் அமர்ந்திருந்தான், அங்கு வந்த சோமேஸ்வரன் அவனுடைய பால்ய நண்பன், இருவரும் அடிக்கடி சந்திக்கும் இடத்தில் உரையாடுவது வழக்கம்.

சொக்கன்: என்னப்பா ரொம்ப நாளா ஆளையே காணும்,

சோமேஸ்வரன்: அதுவா கொஞ்சம் வேலை. கூடவே மனதுக்கும் அத்தனை சுகமில்லை என்ன செய்ய.

சொக்கன்:என்ன அப்படி கவலை?

சோமேஸ்வரன்: என்னமோ இலங்கையில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை, அத்தனை கொடுமையாக உள்ளது,

சொக்கன்: ஓ அதுதானா கவலை, அதென்னப்பா இந்த உலகம் இப்படி கண்ணை மூடி கிடக்கிறது, எங்கோ மேற்கு நாடுகளில் ஒரு சிறிய தாக்குதல் நடந்தால் உடனே உலகம் அப்படி தவிக்கிறது ஆனால் இங்கு அநியாயமாக இப்படி கொல்கிறார்கள் கேட்க நாதியில்லை. அந்த வீடியோ காட்சிகளை பார்த்தபின் இரண்டுநாளாய் சாப்பிடக்கூட முடியவில்லை.

சோமேஸ்வரன்: அதுதான் எனக்கு புரியவில்லை, எப்படி உலகம் ஒரு மோசமான திசையில் போகிறதுபார், உலகை ஆள நினைக்கும் பெரிய நாடுகள் இப்படி ரத்த ஆறுகளை தடுக்க விரும்பாமல் இருபதின் நோக்கம் என்ன என்று புரியவில்லை.

சொக்கன்: எல்லாம் அதிகார போதைதான் என்று தோன்றுகிறது, ஆரம்பத்தில் பொதுநலனில் தொடங்கும் ஒரு முயற்சி மெல்ல மெல்ல கடும் சுயநலத்தில் கொண்டு போய் விடுகிறது. அதில் கிடக்கும் அழிவுகளையும் இழப்புகளையும் பற்றி மனம் கவலைப்படும் நிலையை கடந்து விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

சோமேஸ்வரன்: எத்தனை உயிர்கள் இந்த பாழாய்போன போர்களில் மடிகிறார்கள், ஆனாலும் போர்கள் ஓயவே இல்லை பார்,

சொக்கன்: ஆமாம் பா.சிங்காரம் கூட தனது கடலுக்கு அப்பால் புயலிலே ஒரு தோணி நாவல்களை இரண்டாம் உலக்ப்போர் பின்னனியில் அந்த அழிவுகளைப்பற்றி எழுதுகிறார் அதன் இழப்புகளை காணும்போது இந்த போர் ஏன் படைக்கப்பட்டது என்று மிகுந்த வேதனையாக இருக்கிறது,

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்