எனது மூன்று வயது மகள்
என்னோடு பேச மறுக்கிறாள்
நான் வம்படியாக தூக்கினாலும்
விலகிக்கொண்டு வெறுப்பாய் பார்க்கிறாள்
அம்மாவே உலகம் என்று ஆகிக்கிடந்தவள்
சுவரின் மூலையில் சோர்ந்து கிடக்கிறாள்
என் இரண்டாவது மகள் பிறந்து
இரண்டு வாரம்தானே ஆகிறது
என்ன செய்ய
சின்ன தங்கையின் சிறு விரல் தொட்டு
சிரித்துக்கொள்கிறாள்
நான் தொட்டு தூக்கும் போது
தள்ளி நின்று
தான் யாரோவாகிப்போனதாய்
மெல்ல என் தலையணையில் தலைவைத்து
படுத்துக்கொள்கிறாள்
என்ன செய்வது
என் கண்களில் கசியும் கண்ணீர்துளிகள்
அவள் காயம் ஆற்றுமா?
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்