
எனக்கென்னவோ இது ஒரு தனுஷ் படம் என்று சொல்லமுடியவில்லை, எந்த கதாபாத்திரமும் தனது சொந்த அடையாளத்தை காட்டாத ஒரு படம். எதார்த்தம் மீறாத ஒரு கதை அமைப்பு, முடிவிலும் ஒரு மாற்றமான சுபம் போட்டு முடிக்காத முடிவு, ஆனால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் முடிவு
எனக்கென்னவோ இது ஒரு புதிய தமிழ் சினிமாவின் அடையாளம் என்றுதான் நினைக்கிறேன், சேவல் சண்டையைப்பற்றி இயக்குனர் அதிகம் களப்பணி செய்து உருவாக்கி இருக்கும் படம். நல்ல உழைப்பை கொடுத்து கொண்டுவந்திருக்கும் இந்த படம் அவசியம் வெற்றி பெறவேண்டும். சிலகுறைகள் கூறப்படுகின்றன. அவைகள் பெரிய விஷயமாக எனக்குப்படவில்லை. ஒரு பிரபலமான ஹீரொவை வைத்துக்கொண்டு அவரின் சுய மேனரிசங்கள் வெளிப்படாமல் படம் எடுப்பது என்பது பெரிய விஷயம்.
தனுஷ் தனது சுய அடையாளங்களை பற்றி கவலைப்படாமல் ஒரு தேர்ந்த கலைஞனாக வாழ்ந்திருக்கிறார், அவர் ஒரு படி மேலே போய்விட்டார் என்றுதான் நினைக்கிறேன். மற்ற கலைஞர்களும் கூட யாருமே சுய அடையாளங்கள் மேலே வராமல் அந்த அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அவசியம் பார்க்க வேண்டிய படம்.
எனக்கு விமர்சனம் எழுத தெரியாததால் அதன் தொடர்பை கொடுத்திருக்கிறேன் கீழே.
விமர்சனம் இங்கே
தவநெறிச்செல்வன்.
Me the First.
ReplyDeleteSee,
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html.