Nov 25, 2008

நண்பரின் கைவண்ணம்

எனது நண்பர் திரு ஜீவா அவர்கள் ஒரு வித்தியாசமான விஷயத்தை எழுதியுள்ளார் அவரின் வேண்டுகோளின் படி இந்த பதிவு, வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், தொடர் பணி சுமையால் ஏதும் எழுத முடியாத நிலை விரைவில் எழுத முயல்கிறேன். அன்புடன் செல்வன்

எனது அன்பு தமிழ் வாசகர்களுக்கு எனது முதற்கண் வணக்கம், எனக்கு தமிழ்மேல் அதிக பற்று உண்டு, ஆனால் அது உறங்கி கொண்டிருந்தது, அதை தட்டி எழுப்பியது எனது அன்பு நண்பர் திரு. செல்வம் அவர்கள்தான். இது எனது முதல் பயணம் இதில் தமிழில் சில சொற்களை பற்றி ஆராய்வோம். நாம் அன்றாடம் காணும் சினிமாவிலும், மற்றும் சமுதாயத்திலும் வழக்கமாக உபயோகிக்கும் வார்த்தை ஒக்கமக்கா, குண்டக்கமண்டக்க என்ற வார்த்தை இது எப்படி வந்தது என்று இப்பொழுது பார்ப்போம். ஒரு கற்பனைதான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பம் இருந்தது, அந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள், அதில் மூத்தது ஒரு குண்டான பெண்பிள்ளை, இரண்டாவது ஒல்லியான பெண்பிள்ளை ,மூன்றாவது ஆண் பிள்ளை, இந்த மூன்றுபேரும் ஒரே பள்ளிகூடத்தில் படித்து வந்தார்கள், இவர்கள் எப்பொழுதும் பள்ளிக்கூடம் போனால் ஒன்றாகத்தான் சேர்ந்து போவார்கள். இதில் அதிக புத்திசாலி ஒல்லியானபெண், மூத்த பெண் நன்றாக படிக்காது, அதனால் அந்த பெண்ணை எல்லோரும் மண்டு என்றுதான் சொல்வார்கள், பள்ளிகூடத்தில் கேள்வி கேட்டால் தவறாகத்தான் பதில் சொல்லும், ஆனால் இரண்டாவது பெண் நன்றாக பதில் சொல்லும், ஒருநாள் இரண்டாவது பெண் ஆசிரியர் கேள்வி கேட்கும் பொழுது தவறாக பதில் சொல்லிவிட்டது, அதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், உங்க அக்கா குண்டு அக்கா மண்டு அக்கா மாதிரி பதில் சொல்லாதே என்று ஆசிரியர் சொல்ல , அது முதல் அது மருவி குண்டக்க மண்டக்க (குண்டு அக்கா மண்டு அக்கா) என்று ஆகிவிட்டது, இதுதான் குண்டக்க மண்டக்க கதை, அது மாதிரி ஒக்கமக்க எப்படி வந்தது என்றால், அந்த குண்டான அக்காவை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள், அந்த அக்கா ஒருமுறை மாப்பிள்ளையோடு வீட்டிற்கு வந்துஇருந்தபொழுது , மாப்பிள்ளை ஏதோ கேள்விகேட்க்க அதற்க்கு பதில் தெரியாமல் அந்த பெண் நின்றுகொண்டிருந்தது, அப்பொழுது அந்த வீட்டில் உள்ள பையன் அத்தான் பெரியக்காவிற்கு ஒன்றும் படிக்கத்தெரியாது மண்டு அக்கா என்று மாபிள்ளை இடம் சொல்ல, அதை கேட்ட அந்த மாப்பிளை ஆச்சிரியத்தோடு, உங்க அக்கா மக்கா என்று கேட்டுஇருக்கிறார், உங்க அக்கா மக்கா என்றது மருவி ஒக்கமக்க என்று ஆகிவிட்டது. மேலும் அடுத்த பயணத்தில், கொய்யால, டகால்டி பற்றி பார்ப்போம்

இப்படிக்கு என்றும் அன்புடன்
S.ஜீவரத்தினம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்