tag:blogger.com,1999:blog-902921464100004082.post1369877387190260924..comments2023-10-19T04:56:35.303-07:00Comments on தவநெறிப்பூங்கா: மார்கழியின் மலரும் நினைவுகள்Anonymoushttp://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-902921464100004082.post-89369745296874126622009-01-05T23:06:00.000-08:002009-01-05T23:06:00.000-08:00மார்கழி மாத மலரும் நினைவுகள் படித்தேன், அது என்னை ...மார்கழி மாத மலரும் நினைவுகள் படித்தேன், அது என்னை மார்கழி மாதத்திற்கே அழைத்து சென்றுவிட்டது. மார்கழிமாத பஜனையில் நான் பங்குகொண்டிருக்கிறேன். எனக்கு சங்கு ஊதுவதில் அதிக விருப்பம், சங்கு ஊதினால் மிளகு பொங்கல் அதிகம் கிடைக்கும். பாட்டு- மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரவேண்டும் இறைவா..... மருதப்ப நாயக்க மாமலை ஒருதரம், கோவிந்தனுக்கு சந்கீதனமாம் கோவிந்தா... , கோவிந்தா... என்று நான் பாடிய பாடல் மறக்க முடியாது. நான் இந்த மாதத்தில் அதிக நேரம் தூங்கினால், என்னை என் அம்மா திட்டுவார்கள், பீடை பிடித்தவனே எழுந்திருடா,எழுந்திருடா என்று எழுப்புவார்கள். இந்த மாதத்தை பீடை மாதம் என்றும் சொல்வது உண்டு. மார்கழி மாதத்தில் இரவு நேரம் சங்கு ஊதி பண்டாரம் வருவார், அதை நீங்கள் எழுத மறந்துவிட்டீர்கள், இந்த மாதத்தில் காலை நேரத்தில் நன்றாக உறக்கம் வரும் அது மிகவும் அருமையான உறக்கம். மறக்க முடியவில்லை. நினைவு படுத்தியதிற்கு மிகவும் நன்றி.<BR/> <BR/>அன்புடன் <BR/> <BR/>ஜீவாAnonymousnoreply@blogger.com