Jan 19, 2009

எனது நண்பர் ஜீவாவின் சுற்றுலா

அபுதாபி

எனது நண்பர் ஜீவாவின் சுற்றுலா அனுபவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனுபவம் அரபு நாட்டின் சூழலை விளக்குவதாகவும், அங்கே பணிபுரியும் நம்மவர்களின் வாழ்க்கை பதிவாகவும் இருக்கும், அவர் தனது புதிய பரிமாணமாக எழுத்துலகுக்கு வருகிறார், பிற்காலத்தில் நல்ல நகைச்சுவை எழுத்தாளராக வரக்கூடிய திறமை உள்ளவர் என்பது என் நம்பிக்கை.

இனி அவரின் கைவண்ணம் காணுங்கள்.

நாள் - திங்கள் கிழமை- 07/12/08
இடம் -அபுதாபி -அமீரகத்தின் -அலைன்-( Al Ain ) ஜபல் அல் ஹபிட் –( Jabal Al Hafeet ) மற்றும் துபாய் - ஜுமைரா கடற்கரை.
பங்கேற்பாளர்கள்
சரவணன் - சிற்றுலா தலைவர்
குமார், ஜீவா, மகாலிங்கம்,முனுசாமி, ஷண்முகம், ரமேஷ், ராஜாங்கம், சின்ன சரவணன், சுரேஷ், ரூபன், ஜெயகுமார், மற்றும் கண்ணன் நாங்கள் மொத்தம் பதிமூன்று பேர்கள்.

திங்கள் கிழமை காலை சரியாக எட்டு மணிக்கு வண்டி புறப்பட்டது, அந்த நேரத்தில் குமாரையும் , மற்றும் சில நண்பர்களை காணவில்லை, குமார் எங்கே என்று கேட்டபொழுது, கை நிறைய கூடை கேக், இனிப்பு கேக், மற்றும் பழச்சாறு குப்பி வாங்கிகொண்டு மாடர்ன் பேகரியில் இருந்து மிகவேகமாக ஓடி வந்து வண்டியில் ஏறினார்கள். வண்டி புறப்பட்டது , மெதுவாக நகர்ந்தது, வண்டியின் ஓட்டுனர் மிகவும் குள்ளமானவர், அவரின் குரல் மிகவும் கீச்சி, கீச்சி என்று இருக்கும் , அவர்தான் எங்கள் மகிழ்ச்சிக்கு காரணமானவர். அவர்மட்டும் இல்லை என்றால் சிரிப்புக்கு வழி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்பொழுது வண்டி எலக்ட்ரா ரோட்டை வந்து அடைந்தது, அங்கே ராஜாங்கம் என்னும் நண்பருக்காக வண்டி காத்துகொண்டிருந்தது. காத்து கொண்டிருந்த எலக்ட்ரா சாலையில் பிலிப்பைன் நாட்டு பெண்ணும், ஒரு தமிழ் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள், அதை சுரேஷ் என்பவர் வண்டியில் இருந்தபடி மிகவும் ரசித்துகொண்டிருந்தார், (சுரேஷ் மட்டும் அல்ல எல்லோரும்தான்) ராஜாங்கத்திற்காக காத்து இருந்த நேரத்தில், பூத்து இருந்த நடமாடும் பூவை பார்த்து நேரம் போனது.
ராஜாங்கம் ருவைஸ் எனும் ஊரிலிருந்து வந்துகொண்டிருந்ததாக சொன்னார்கள். இதில் பெரிய கூத்து என்னவென்றல் ராஜாங்கத்திற்கு, எலக்ட்ரா ரோட்டில் உள்ள எலக்ட்ரா சினிமா மட்டும்தான் தெரியுமாம். அவருக்கு அபுதாபியில் வேறு எந்த இடமும் தெரியாது என்று நினைக்கிறேன் அதனால் மிகவும் தாமதமானது.. சற்று நேரத்தில் அவரும் வந்து சேர்ந்தார். வண்டி எலக்ட்ரா சாலையை விட்டு புறப்பட்டது. அங்கிருந்து வண்டி கார்னிச் சாலை வழியாக அலைன் நோக்கி போய்க்கொண்டிருந்தது,
வண்டி போய்க்கொண்டிருந்த சமயத்தில், எல்லோருக்கும் தமிழ் பாட்டு கேட்கவேண்டும் என்ற ஆவல். அதனால் குமார் கைபேசியில் உள்ள ஞாபக அட்டையை எடுத்து ஓட்டுனரிடம் கொடுத்தோம். அவர் அதை வாங்கி யு எஸ் பி ரீடரில் இட்டு பாட்டை பாட செய்தார். முதல் பாட்டு தலைவர் பாட்டு, பல்லே லக்கா பாட்டு, அதை கேட்டபடி வண்டி சென்றுகொண்டிருந்தது . ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து இருந்த சுற்றுலா தலைவர் சரவணன் பாட்டை கேட்டபடி, தலை அசத்து ஆட்டம் போட்டார். நானும் ஆட்டம் போட்டேன். வண்டி உம் அல் நாரை கடந்து சென்றவுடன். சில நண்பர்களுக்கு உறக்கம் வர தொடங்கிவிட்டது. பிறகு பநியாசை வண்டி நெருங்கியவுடன் எல்லோரும் உறங்கிவிட்டார்கள்.
வண்டி போய்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்த்த போது சாலையின் இருபுறமும் மணல் குவியல்கள், மண் குவியலின் மேல் காற்றின் கைவண்ண ஓவியம். அவற்றில் ஓன்று பெண்கள் அணியும் நெளி வளையல்கள் போன்ற ஓவியம். அள்ளி உண்ண முடியாத கோதுமை குவியல் இன்னும் எத்தனை அழகு வர்ணிக்க நேரம் போதவில்லை.
இப்பொழுது வண்டி அலைன் வந்து சேர்த்துவிட்டது, ஆனால் மலைமேல் போக வழி தெரியவில்லை, அந்த இடத்தின் பெயருன் ஓட்டுனருக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் ஓட்டுனர் ஒரு பாகிஸ்தான் வழி போக்கனிடம் ஜபல் அல் பாயிதா கிதரே.? என்று கேட்டார், ஆனால் அவனுக்கு வழி தெரியவில்லை. மாலும் நஹி என்று சொல்லிவிட்டான். அடுத்து ஒரு அரபி பையனிடம் ஜபல் அல் பாயிதா ஒயின்? , என்று கேட்டார், அதற்கு அவன் சூ பி பாயிதா ? மாபி மாலும் என்று சொல்லிவிட்டான். பிறகு ஒரு வழியாக மலை பக்கத்தில் வண்டியை நிறுத்தி எல்லோரும் சிறுநீர் கழிக்க சென்றுவிடோம், அந்த நேரத்தில் ஓட்டுனர் , ஒரு மலையாள ஆளிடம் மலைக்கு மோல எங்கனே போவனும்.? என்று கேட்டு, வழி தெரிந்து கொண்டார். சிறுநீர் கழித்து விட்டு எல்லோரும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். வண்டி புறப்பட்டு சென்று மலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அருகில் நின்றது. எல்லோரும் ஏரியின் அழகை ரசித்தோம், இந்த ஏரியின் நடுவில் ஒரு நீரை பாய்ச்சு அடிக்கும் ஊற்று உள்ளது. அதைவிட ஏரியின் உள்ளே, எத்தனை மீன்கள், அவை நாம் கொடுக்கும் உணவை உண்டு வாழ்கிறது. நாம் உணவை நீரில் போடும் போழ்து அதை மீன் லாவி பிடிக்கும் அழகே அழகு. மீன்கள் ஒன்றோடு ஓன்று போட்டி போட்டுகொண்டு நாம் போடும் உணவு பண்டங்களை மேலே தாவி பிடிக்கும் அழகே தனித்தன்மை வாய்ந்தது. அங்கே எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம். நாங்கள் புகைப்படம் எடுக்கும் சமயத்தில் ஸ்பீடு சண்முகம் வெகு தூரம் நடந்து சென்றுவிட்டார். அவர் எப்பொழுதும் வேகம்தான், . முனுசாமி என்னிடம் சொன்னார், சண்முகம் பைத்தியம் மாதிரி எங்க போறான்? கூப்பிடுங்கள் அவனை.என்றார் பிறகு நாங்கள் சண்முகத்தை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டோம். பிறகு நாங்கள் எல்லோரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஒன்றாக சேர்ந்து நின்று ஏரிக்கு அருகில் புகைப்படம் எடுத்துகொண்டோம், அதன் பிறகு நாங்கள் மலை மேல போக தயாரானோம், அப்பொழுது ஓட்டுனர் சொன்னார் மலை மேல போனால் நான் வேறு எங்கும் வரமாட்டேன் என்று தர்க்கம் செய்தார், அவரை நாங்கள் தாஜா செய்து பிறகு ஒற்றுகொண்டர், ( சந்தோசத்தை மட்டும் இலக்காகக்கொண்டு சிற்றுலா போன நாங்கள், ஓட்டுனரிடம் ஏற்ப்பட்ட சில வழுக்குகளை நான் சொல்ல விருப்பவில்லை) , வண்டி புறப்பட தயார் ஆனது, எல்லோரும் ஏறியாச்சா என்று ஒருமுறை சரி பார்த்துவிட்டு, வண்டி புறப்பட்டு மலையின் அடிவாரத்தில் ஒருவட்டம் அடித்தது, அப்பொழுது அங்கே தற்காலியமாக அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்களில் அரபி நாட்டவர்களும் , மற்றும் பிலிப்பைன் நாட்டு மக்களும். தங்கி தங்களின் சந்தோஷத்தில் பாடிக்கொண்டும்,ஆடிகொன்டும் இருந்தார்கள், அப்பொழுது அங்குஉள்ள ஒரு கூடாரம் காற்றில் ஆடிகொண்டிருந்தது, அதை பார்த்து விட்டு ஒரு நண்பர் சொன்னார், அங்கே பாருங்கள் கூடாரத்தின் உள்ள கூதுகலம் நடக்கிறது என்றார் அதற்க்கு வேறு ஒருவர் சொன்னார், நீ வேறப்பா அது காற்றில் ஆடுகிறது என்றார் அதை கேட்ட நாங்கள் எல்லோரும் சிரித்துவிடோம், பிறகு அங்கிருந்து வண்டி மலை மேல ஏற தொடங்கியது. கைத்தொலைபேசி ஒலித்தது, கைதொலைபேசியை எடுத்த உடனே சொன்னார், என்னும் கொஞ்சநேரத்தில் நாங்கள மேலே போய்விடுவோம் என்றார், அதற்க்கு நான் சொன்னேன் யோ என்னையா சொல்றே.? பயமுருத்தாதையா பயமாஇருக்கு, மலை மேலபோய்விடுவோம் என்று சொல்லு என்றவுடனே எல்லோரும் சிரித்துவிட்டோம். (நீங்கேள சொல்லுங்கள் இன்னும் சொஞ்சநேரத்தில் மேலே போய்விடுவோம் என்றால் யாருக்குத்தான் பயம் வராது.) அந்த சிரிப்பு ஒலி முடிந்தவுடேனே, நாங்கள் பார்த்த காட்சி மிகவும் அருமையாக இருந்தது அது வேறு வொன்றும் இல்லை. அந்த மலை மேல கட்டப்பட்டு இருந்த ஒரு கட்டிடம் மிகவும் அருமையாக இருந்தது, மலையின் விளிம்பில் கட்டப்பட்டு இருந்தது அது பயணிகள் தங்கும் வசதிக்காக அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம். கட்டிடம் மட்டும் அல்ல, மலைபுரத்தின் இருபுறமும் கிழே நோக்கினால் அருமையா காட்சிகளை நாம் காணமுடியும். வண்டி மலை உட்சியை வந்து அடைந்துவிட்டது. எலோரும் இறங்கினோம், இறங்கியவுடேனே நாங்கள் பார்த்த முதல் காட்சி பாட்டும்,ஆட்டமும்தான், ஸ்ரீலங்கா நாட்டு பெண்ணுடன் பாகிஸ்தானி பட்டான் சேர்ந்து ஆடிய ஆடம் மிகவும் அருமை, அங்கே வந்து இருந்தவர்களின் கூட்டம் அவர்களைத்தான் பார்த்து கொண்டிருந்தது. மலைமேல மிகவும் குளிராக இருந்தது. எல்லோரும் புகைப்படம் எடுத்துகொண்டோம்., அங்கே பாதுகாப்பு தடுப்பு வேலியை தாண்டி சென்று எல்லோரும் வேடிக்கை பார்த்தோம் மிகவும் பயங்கரமான பள்ளத்தாக்கு. அது மிகவும் ஆபத்தானது. அந்த மலையை பற்றி சொல்லவேண்டும் என்றால் அங்கே ஒன்றும் இல்லை ஒரே ஒரு ஓட்டல் மட்டும்தான் இருக்கிறது. வேறு வொன்றும் இல்லை. அதுவும் மிகவும் சிறிய ஓட்டல். அங்கே காலை பனிமூட்டம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் மிதமாக இருந்தது. எல்லோரும் அங்கு சுற்றி பார்த்தவுடன், பிறகு புறப்பட்டு கீழே இறங்கிவந்துவிட்டோம். எங்களின் அடுத்த சுற்றுலா தளம் துபாய் ஜுமைரா கடற்கரை, வண்டி பறந்து சென்றது துபாயை நோக்கி, வண்டி போகும் நேரத்தில் எல்லோரும் தூங்கிவிடோம், இடையில் ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்க எல்லோரும் இறங்கினோம். அது ஒரு பெட்ரோல் வழங்கும் இடம், அதில் உள்ள கழிபிடத்தில் , எல்லோரும் சிறுநீர் கழத்து விட்டு, ஒரு பத்து நிமிடம் ஓய்வு எடுத்துகொண்டோம். பிறகு எல்லோரும் வண்டியில் அமர்ந்துகொண்டோம். வண்டி மிகவும் வேகமாக துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த. மீண்டும் எல்லோருக்கும் பசி மயக்க உறக்கம் வந்துவிட்டது. எல்லோரும் விழித்து பார்த்தால் மணி மூன்று ஆகிவிட்டது , உண்ண உணவகம் , தேடி தேடி , மணி மூனரை ஆகிவிடாது இறுதியில் துபாய் ஜுமைரா கடற்கரை பக்கத்தில் உள்ள ஒரு கே பி சி உணவகத்தில், என்னை தவிர எல்லோறோம் சிக்கன் சாப்பிட்டார்கள். பிறகு நாங்கள் கடற்கரை சென்றோம், அங்கே உள்ளாடைகளோடு அலையும் உலக அழகிகளை கண்டோம். நான் அந்த நேரத்தில் முனுசாமியை அழைத்துக்கொண்டுபோய் ஒரு ஆப்பிள் ஒரு பழச்சாறு குப்பி வாங்கி என் பசியை ஆற்றிகொண்டேன். பிறகு அங்கிருந்து ஜுமைரா கடற்கரை ஓட்டலுக்கு வந்தோம், அங்கு வந்தால், மேலை நாட்டு மெழுகு சிலைகள் அங்கும் எங்கும் அலைந்து திரிந்தன, அந்த மெழுகு சிலையை பார்த்து சில பேர் உருகிவிட்டார்கள்..( தவறாக நினைக்கவேண்டாம்) மெழுகு சிலைகள் குளிர்ந்த நேரம் என்பதால் உருகவில்லை. அயல் நாட்டு அழகிகளும் அங்கும் எங்கும் அலைந்து திரிந்தன. ஒயில்டு-(Wild Wadi) வாடி எங்களை வாடி வாடி என்று அழைத்தாலும் நாங்கள் போடி போடி சொலிவிட்டு வந்து விட்டோம். அங்கும் புகைபடம் எடுத்துகொண்டோம்.

எல்லோரும் பிறகு வண்டியில் ஏறும் முன்பு , குமாரும் , சண்முகமும் துபையில் குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறையில் இருந்துகொண்டு சொல்லியிருக்கிறார்கள், நாம் இங்கு வந்தால் அவர்களும் வருவார்கள் பார் என்று அவர்கள் இருவரும் சொன்னதுபோல் , நாங்களும் வாங்க நாமும் அங்கு சென்று, உள்ளே பார்த்து வருவோம் என்றும் உள்ளே எல்லோரும் நுழைந்ததும், அப்பொழுது குமார் சொல்லி சிரித்தார், நாம வந்தா அவர்களும் வருவார்கள் பார் சொன்னது சரியாகதான் ஆகிவிட்டது என்று சொல்லி சிரித்தார்கள், அங்கிருந்து எமிரட்ஸ் மாளிகை சென்று பார்க்கவேண்டும் , என்று சொன்ன உடனேயே ஓட்டுனருக்கு கோபம் வந்துவிட்டது, பிறகு ஒருவழியாக அவரிடம் Nokia கைத்தொலைபேசி வாங்கவேண்டும் என்று பொய்சொல்லிவிட்டு அவரை நிற்பந்தபடுத்தி அழைத்து சென்றோம். பிறகு எல்லோரும் எமிரட்ஸ் மாளிகை வந்து அடைந்தோம். அங்கு சுற்றி பார்த்துவிட்டு , மீண்டும் வண்டிக்கு வரும் பொழுது ஓட்டுனர் கேட்டார் எங்கே மொபைல் என்று எல்லோர்க்கும் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு எட்டரை மணிக்கு அபுதாபிக்கு வந்து அடைந்தோம் , சங்கீதாவில் மினி தாலி சாபிட்டோம், அத்துடன் எங்களது சிற்றுலா , துடங்கிய இடத்திலே நிறைவு பெற்றது.

இந்த சுற்றுலா மூலம் தங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்த சுற்றுலா நம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவங்கள், அந்த அனுபவத்தை நினைவு படுத்துவது நான் எடுத்து கொண்ட புகைப்படம், தயவு செய்து புகைபடத்தை தொலைதுவிடாதிர்கள், தங்களுக்கு அறுபது வயது ஆகும் பொழுது இந்த புகைபடத்தை எடுத்து பாருங்கள். அந்த புகைப்படம் கதை சொல்லும், அந்த நிமிடம் நம் மனதை மகிழுட்டும். நன்றி நண்பர்களே, எல்லோரும் இன்பமுடன் இருக்க ,எனது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
ச.ஜீவா.

.

4 comments:

  1. நல்லாயிருந்தது

    ReplyDelete
  2. Annan Jeeva Avargalukku,

    Intha Chutrulavil pankedutha anaivarukkum intha malarum ninaivugal pidithurukkum yenru nambukiraen.-

    ReplyDelete
  3. nice and lively experience

    ReplyDelete
  4. lively naration.........nice experience to be remembered

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்